Thursday, September 02, 2010

பூச்சரத்தில் கவிதை பூக்களை கோர்க்கும் சிறுவன்



பூச்சரம் தொடுக்க அழைத்த தோழி கீதாவிற்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நிலாரசிகன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால்
    பதிவில்  தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் நிலாரசிகன் அல்ல. 2001ம் ஆண்டு இப்பெயரை தேர்வு செய்தேன். பெயர் வைக்க காரணம் நிலா. வான் நிலா மட்டுமே J


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
2004ல் நண்பன் ‘யோசிப்பவர்’ அறிமுகப்படுத்தியது வலைப்பதிவு. 2005லிருந்து எழுதிவருகிறேன். எழுத வந்த புதிதில் லக்கிலுக்,பாஸ்டன் பாலா,பினாத்தல் சுரேஷ்,பத்ரி,யோசிப்பவர்,பாலபாரதி,டோண்டு போன்றவர்களது வலைப்பதிவுகளை ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம்
   செய்தீர்கள்?
   
 என் வலைப்பதிவின் முதல் வாசகர்கள் என்னுடைய nilaraseegankavithaigal யாகூ குழுமத்தின் உறுப்பினர்கள்தான். இன்றைய விவரப்படி மொத்தம் 5211 உறுப்பினர்கள். இவர்களே வலைப்பதிவு செடியாக இருக்கும் தருணத்தில் நீருற்றியவர்கள். அதன் பிறகு கிடைத்த நட்புச்சொந்தங்கள் ஏராளம். பிரபலமடைய வேறெதுவும் செய்ததாக நினைவில்லை.


5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
    கொண்டதுண்டா?   ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?
    இல்லை என்றால் ஏன்?
இல்லை. விருப்பமில்லை. வலைப்பதிவு என் படைப்புகளுக்கான தளம் மட்டுமே.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?
   அல்லது பதிவுகள்  மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல. மனதின் விளிம்புச்சுவரில் மோதும் கவிதை வரிகள் நிரந்தரமாக தங்குமிடம் என் வலைப்பதிவு.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்?
   அதில் எத்தனை தமிழ் வலைப்  பதிவு?

இரண்டு. இரண்டும் தமிழ். ஆங்கிலத்தில் ஒன்று ஆரம்பித்தேன் அதன் கடவுச்சொல் மறந்துவிட்டதால் நின்றுபோனது.


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா?
   ஆமாம்  என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஆம். அதிக கோபம் கொண்டது ஒரு பதிவர் மீது.மிகச்சிறந்த கவிதைகளை எழுதிய பதிவர் அவர். முட்டாள்த்தனங்கள் ஆட்கொண்டதால் அந்த கவிதை வலைப்பூவை அழித்துப்போனவர்.அவருக்கு புனைப்பெயரும் வைத்து இணைய உலகையும் அறிமுகப்படுத்தியவன் என்கிற வகையில் அவர் மீது கடும் கோபம் இன்றுமுண்டு.
 யாரந்த பதிவர் என்கிற கேள்விக்கு விடையளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்?
   அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

மாதவன். அத்தி பூக்கும் தருணம் மட்டுமே பாராட்டும் குணம் கொண்டவன்.நண்பன்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய
     வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
கூற ஒன்றுமில்லை என் படைப்புகளை தவிர. அவை என் தளத்திற்கு வரும் அன்பர்களுடன் உரையாடட்டும்.
     பூச்சரத்தில்  மேலும்  வாசம் சேர்க்க நான் அழைப்பது நண்பன் விழியன்.