Sunday, September 05, 2010

சிறுமிகள் நடமாடும் வனம்


 

1.சிறுமிகள் நடமாடும் வனம்


பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரை
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை.
எதற்கிந்த கனவென்றே
புரியாமல் கரைகிறது
இவ்விரவு.

2.எதிர்வினைகளால் நிரம்பியவள்

குளம் கடலாகும்.
கடல் துளியாகும்.
பறவை விலங்கினமாகும்.
விலங்கு பாம்பினமாகும்.
ழ் ல வாகும்.
காதலி தோழியாவாள்.
தோழி குரைக்கும் இனமாவாள்.
நீங்கள் நீயாகிப்போவீர்கள்.
நான் யாரோவாகிப்போவேன்.
அவள்,அவள் உலகம்.
இப்போது,
அவனும் நிரம்பிக்கிடக்கிறான்
மெளனத்தால்.
-நிலாரசிகன்.

10 comments:

said...

2-vathu pidichurukku....
vaazhthukal nila......!!

said...

கவிதைகள் அருமை.. இரண்டாவது கலக்கல்...

said...

கவிதைகளை ரசித்தேன்.
அருமை.

said...

Nice... Sorry no tamil font..

said...

Arumai nila..

said...

//காதலி தோழியாவாள்.
தோழி குரைக்கும் இனமாவாள்.
நீங்கள் நீயாகிப்போவீர்கள்.
நான் யாரோவாகிப்போவேன்.
அவள்,அவள் உலகம்.//

நிதர்சனம் ...

said...

romba nalla iruku

said...

arumayana kanavu.. azhagu azhagu

said...

நண்பர்களுக்கு நன்றி...

said...

2nd kavithai sema super..........
chance a illa........