Thursday, November 01, 2012

ஏக்கப்பூனை திரியும் பெருவுடல்




உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத 
ஏக்கம் ஒரு பூனையாகி என்னருகே 
அமர்ந்திருக்கிறது.
மிருதுவான அதன் உடலும் 
மென்மையான ஈர மயிர்க்கற்றைகளும்
அதன் அழகை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது.
மழை ஓய்ந்த முன்னிரவில் 
அதன் கண்களை 
உற்றுப் பார்க்கிறேன்.
ஏக்கப்பூனை காலத்தின் மறு உருவம்.
பிரித்தெறிய முடியாத அட்டையென 
என்னில் ஒட்டிக்கொண்ட கருநிற காலம் 
தன் பற்களிடையே மெதுவாய் எனை
மென்று தின்னத்துவங்குகிறது.
பூனையொன்றின் பசிக்கு உணவாகி
சரிந்து விழுகிறது என்னுடல்.
உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத
மாபெரும் இப்பெருவுடல்!
-நிலாரசிகன்.

3 comments:

said...

ஏக்கத்தை பூனையாக்கி... வித்தியாசமான சிந்தனை...

said...


yenakkup pidichurukku.
vaazhthukal nila.
:)

said...

Very Nice & Excellent :)