Saturday, November 24, 2012

நம்மிடையே மலர்ந்திருக்கும் மலர்




அதற்கு அத்தனை வாசமில்லை.
அவ்வளவு அழகுமில்லை.
கண்ணிமைச் சாமரங்களின்
மென்காற்றில் எப்பொழுதேனும்
உதிர்த்திடும் சில சொற்களை.
கைகளில் இருபது விரல்கள்
முளைத்தபோது அவ்வளவு
அழகாய் தோன்றி
பின்
அமைதியாக நடந்து போனது.
துயரங்களில் மொத்தக்கடலாகி
அதன் இதழ்கள் தொட்டபோது
சிறியதாய் மலர்ந்து
கணங்கள் சில கடந்து
மெளனித்து மொட்டாகியது.
அதற்கும்
அப்பால் ஓர் உலகமிருக்கிறது.
என்றுமே முழுவதும் மலர்ந்துவிடுவதில்லை
நம்மிடையே மலர்ந்திருக்கும்
இம்மலர்.
-நிலாரசிகன்.

1 comments:

said...

/// நம்மிடையே மலர்ந்திருக்கும்
இம்மலர். ///

அதை தான் அறிந்து கொள்ள வேண்டும்...