Saturday, September 02, 2006

பெண்ணினம்..

அவசரக்காரன் அடிப்பான்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

கோபக்காரன் திட்டுவான்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

குடித்தாலும் நல்லவன்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

கொஞ்சம் முரடன்
பொறுத்த்க்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்ட
என்னை ஊர்கூட்டி
மலடி இவள்
என்கிறான்.

பொறுத்துக்கொள்
என்பீர்கள் என்றெண்ணி
சரியென்று தலையசைக்க
தயாராகுகிறேன்
அவன் மலடன்
என்பதை அறிந்த
நான்.

0 comments: