Saturday, September 16, 2006

அக்கரை சீமை அழகினிலே...

"நல்ல வாட்ச் ஒண்ணு வாங்கிட்டு வா
மாப்ளே" என்பான் தோழன்.

"நமக்கு ஒரு கேமரா போதும்
தம்பி" என்பார் பக்கத்துவீட்டு
அண்ணன்.

"ரிமோட் கண்ட்ரோல் ஏரோப்ளேன்
வேணும் மாமா" என்பான் அக்காள்
மகன்.

எல்லோர் முன்பும் வெளிநாட்டில்
வசிப்பது பெருமையாக
எண்ணும் வேளையில்..

எல்லோரும் எல்லாமும் கேட்டுச்
சென்றபின் அருகில் வந்து
உள்ளங்கை பற்றி மெதுவாய் சொல்லும்
மனைவியின்
"அடிக்கடி போன் பண்ணுங்க உங்க
குரல் கேட்கணும்" என்கிற வாக்கியத்தில்
மறைந்து போகும் பெருமையும்
வெளிநாட்டின் வசதிகளும்!

2 comments:

said...

I really liked it.

Thaaikuppin Thaaram - Its true.. other than that Nobody else

The words of the Wife really superb!!!

said...

அசத்திட்டிங்க!!!

//Thaaikuppin Thaaram //


நான் கூட அம்மா தான் வந்து ஏதோ கேக்க போறாங்கன்னு நினைச்சேன்