Friday, May 11, 2007

கனவில் ஒரு முகம்....

தூளியில் எட்டிப்பார்க்கும்

குழந்தையின் முகம்

போல....

கடல்மீது அசைந்தாடும்

பவுர்ணமி நிலாமுகம்

போல...


கற்பூர ஒளியில் கடந்து

செல்லும் தாவணிமுகம்

போல...



தெரிந்தும் தெரியாமலும்

மழையில் நனைந்த

ஓவியம் போலே

உன் முகம் என்

கனவில் பூத்ததடி...