Saturday, May 12, 2007

மனவலி...

மின்விசிறியின் சத்தம் பெருகிப்
பெருகி பேரிரைச்சலாக
உணரத்துவங்குகிறது மனது....

காற்றில் மிதந்து வரும்
மருந்துவாசம் சுவாசத்தின்
ஆழம் சென்றதில்
கலவரப்படத்துவங்கிறது மனது...

சோதித்துச்செல்லும் மருத்துவக்கூட்டம்
கண்டு மெல்ல மெல்ல
மருளத்துவங்குகிறது மனது...


விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!

0 comments: