Wednesday, May 30, 2007

கருத்தப்புள்ள செவத்தரயிலு!

ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி

ஆசவச்சேன் அவமேல
மீசவச்சேன் ஒதட்டுமேல

குளத்தங்கரை படிக்கட்டுல
குளிக்கவருவா வெடலப்புள்ள

கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்

முட்டக்கண்ணு சிவந்திருச்சு
கெட்டக்கோவம் வந்திருச்சு

தப்புக்கணக்கு போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா

பஞ்சாயத்த கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா

ஊர்கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக

மானமருவாதி கப்பலேறிச்சு
ரெண்டாயிரம் கப்பங்கட்டியாச்சு

அவமேல ஆசப்பட்டகதைய
எவகிட்ட சொல்லிஅழுவ?

மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல்கெடக்கே!

ரெண்டுநாளு பட்டினிகெடந்தேன்
பட்டணம்போக மூட்டகட்டுனேன்

கருத்தப்புள்ளய காதலிச்சகதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்

வெடுவெடுன்னு நடந்துபோயி
வீசிப்புட்டேன் அவமேல

திரும்பிக்கூட பார்க்காம
பதிலேதும் கேட்காம

வீறாப்பா கெளம்பி
விரசா ரயிலப்புடிச்சுப்புட்டேன்

வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்

உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவநினப்பு!

புகைய கக்கிப்புட்டு
கெளம்புது சிகப்புரயிலு

ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?

கண்ணமூடி ஒக்காந்தா
கனவுல அவமுகம்

கண்ணுமுழிச்சு பார்த்தா
எதிர்சீட்டுல அவமுகம்!

கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப

முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவசிரிக்கா!

கண்ணால புரியாதகாதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா

ஓன்னு அழுது
ஓடோடி வந்திருக்கா

தாலிகட்ட போறேன்
தாரமாக்க போறேன்

பட்டணம்போயி பத்தாயிரம்
சம்பாதிக்க போறேன்

கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்தபுள்ளகூட வாழப்போறேன்

ஏலேய் ட்ரைவரு!

விரசாஓட்டு இதுரயிலுவண்டியா
இல்ல கட்டவண்டியா?

9 comments:

said...

Excellent..!!!

said...

Excellent..!!

Anonymous said...

Really superb poet , nice touching lines ,hands off to you .....!!!!

Anonymous said...

Nalla Iruku

Anonymous said...

Hello Nilaraseegan Super ha irukkunga........... you are the role model for all young tamil !....

said...

unna unavu pidikkavillai!
unnai pola



yezhutha mudiyathathal!


Nagendran!

said...

Unna unavu pidikkavillai!

Unpol

Yezhutha mudiyammal!

Anonymous said...

cooool one

said...

ungal unarvugalum, sinththanaikalum nalla irukirathu