Monday, April 14, 2008

பட்டம்

பக்கத்து தெரு
கோவிலுக்கு போனதில்லை
பாட்டி.

அடுத்த ஊர்
மாதச்சந்தையை கனவில்
மட்டுமே கண்டுமகிழ்ந்தாள்
அம்மா.

சினிமாவில் மட்டுமே
சென்னை ரசித்தாள்
அக்கா.

குடும்பத்தில் முதன்முதலாய்
படித்தவன் என்கிற
பட்டத்துடன்,
கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்
பெண்ணடிமை விலங்குகளை
உடைக்க முயற்சிக்காத
ஆணாக.

7 comments:

said...

//கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்
பெண்ணடிமை விலங்குகளை
உடைக்க முயற்சிக்காத
ஆணாக.//

நச்.
அருமை நிலா

said...

ஆழமான வரிகள்...
அழகான வரிகள்....


Senthil Kumar,
Bangalore

said...

மாற்றம் விரைவில் ஏற்படாது ....

ஏற்படும் போது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் ஆணாக இருப்போம்....

!!!!!!வரிகள் அருமை!!!!!!!

said...

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.

said...

செம செம!

said...

உண்மை...உயர்வான கவிதை

said...

ச்சே!!!!!!