Tuesday, April 01, 2008

குறைப்பிறவி


உயிர்த்தெழுதல் சாத்தியமற்று
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது
அரங்கேறா கவிதைகள் சில..

கவிதைகளின் மெல்லிய
விசும்பல்சப்தம்
செவிக்கருகில் ஒலித்து
ஓய்கிறது தினமும்...

ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.

4 comments:

said...

//ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.//

நல்ல வரிகள்.

said...

அரங்கேறாத அந்த
சில கவிதைகள்
அங்கீகாரம், அபிப்பிராயம்
எனும் தேவைகளற்று
மனத்தின் எல்லையிலேயே
வைத்து போற்றப்பட வேண்டியவை
வலிகளோடு.

அழகிய வரிகள்...

said...

:) ஓடித்திரியும் பிள்ளைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், மனமிருந்தால் மார்க்கமுண்டு!

said...

அழகிய கவிதை!