Wednesday, September 02, 2009

மனுஷ்யபுத்திரன் கவிதை

இம்மாத உயிர்மை இதழில் வெளியான கவிஞர்.மனுஷ்யபுத்திரன் கவிதையொன்று வெகுவாய் என்னை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் கடைசி வரி.சொல்ல முடியாத துக்கம் கண்களுக்கு புலப்படாமல் மெல்லிய நீரோடையாய் இக்கவிதையின் பின் ஓடுவதாய் தோன்றுகிறது.இதோ அக்கவிதை...

பரிசுத்தத்தின் பயன்பாடு

அவளைப்போல் யாரும்
எல்லாவற்றையும்
அவ்வளவு
சுத்தமாக வைத்திருக்க முடியாது

அவ்வளவு நேர்த்தி
அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு கவனம்
அவ்வளவு அழகுணர்ச்சி
அவ்வளவு திட்டமிடல்
அவ்வளவு பரிசுத்தம்

நாம் யாருக்கும்
ஒருபோதும்
ஒன்றையும் பயன்படுத்தவே
தோன்றாது

ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவோ
ஒரு சோபா நுனியில் அமரவோ
ஒரு முத்தமிடவோ.


நன்றி: உயிர்மை.

2 comments:

Kalaivani said...

amam nilaraseegan...
kavithai romba nalla irukku...
athilum antha kadaisi varigala irukira sogama virakthiya romba azhaga eluthi irukaga...

pagirnthamaikku mikka nandri....

said...

sabaash.......!!

yezhuthiyavarukkum,
rasiththavarukkum........