Wednesday, September 16, 2009

வீதியெங்கும் உலவும் ப்ரியங்கள்




1.

ஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்

ப்ரியங்களை வெகு இயல்பாய்

மறுதலித்து செல்கிறாய்.

வலிகொண்ட அதன் ப்ரியங்கள்

உன்னை பின் தொடர்ந்து

அன்பை யாசிக்கிறது.

ஒரு குவளையில் பாலூற்றி

அதற்கு அளிக்கிறாய்.

கடமை முடிந்துவிட்ட

திருப்தியில் உறக்கத்தில் ஆழ்ந்துபோகிறாய்.

அன்றிலிருந்து மிருகமானது

ப்ரியங்கள் அறுந்த

நாய்க்குட்டி.

2.

மழைத்துளிகளை சுமந்து வந்த

நாய்க்குட்டி

கண்ணாடியில் லயித்திருக்கும்

உன்னருகில் உடலை சிலிர்த்துக்கொண்டது.

இடம்பெயர்ந்த மழைத்துளிகள்

உன்

கன்னத்தில் பருக்களாயின.

சிவந்த விழிகளுடன்

நாய்க்குட்டியை துரத்துகிறாய் நீ.

உன்னிலிருந்து உதிர்கின்றன

உலர்ந்த மழைத்துளிகள்.

-நிலாரசிகன்.
_______________

16 comments:

said...

அழகான கவிதைகள்!

-ப்ரியமுடன்
சேரல்

said...

"அன்றிலிருந்து மிருகமானது
ப்ரியங்கள் அறுந்த
நாய்க்குட்டி"
- அர்த்தம் மிகுந்த வரிகள்..நல்லா இருக்கு..

உன்னிலிருந்து உதிர்கின்றன
உலர்ந்த மழைத்துளிகள்.
- ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துகள்!

said...

முதல் கவிதை மனதை லேசான ஒரு மௌனத்திற்கு கொண்டு போகிறது...

மிக அருமை....

said...

Mazhai thuli and parukkal.. Nalla karpanai.

Kavidhai Arumai.

said...

எப்படி உங்களால் இப்படி யதார்த்தத்தை பிசைந்து எழுத முடிகிறது
அழகுங்க
ரசித்தேன்

said...

Good Poems :)

//இடம்பெயர்ந்த மழைத்துளிகள்

உன்

கன்னத்தில் பருக்களாயின.//

Romba nalla karpanai..

Kalaivani said...

//"வீதியெங்கும் உலவும் ப்ரியங்கள்"//

azhagana thalaippu....

//ஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்

ப்ரியங்களை வெகு இயல்பாய்

மறுதலித்து செல்கிறாய்.

வலிகொண்ட அதன் ப்ரியங்கள்

உன்னை பின் தொடர்ந்து

அன்பை யாசிக்கிறது.//

migavum iyalbana azhagana kavithai varigal..... really superb...

//இடம்பெயர்ந்த மழைத்துளிகள்

உன்

கன்னத்தில் பருக்களாயின.

சிவந்த விழிகளுடன்

நாய்க்குட்டியை துரத்துகிறாய் நீ.

உன்னிலிருந்து உதிர்கின்றன

உலர்ந்த மழைத்துளிகள்.//

epdi ungalala ipadi ellam yosikka mudiyuthu..... very very nice lines....

Totally superb.....

said...

வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றிகள் :)

said...

intha thalaippe remba pidiththathu:)

manasaith thottathu!!

yellaamum azhagu:)

vazhththukal.......nila!!

nanthini said...

Remba arumainga Nila, unkal chinthanaikal en cinthail sikaram thottu nirkkirathu.....

Anonymous said...

முதல் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

விக்னேஷ்

Anonymous said...

Good one...

said...

Idayathai thodum varigal.Arpudhamana kavidhai.Vaazhga,Valarga,Velga,Innum niraiya kavithaigal ezhudhuga.
N.R.SAMPATH.

kalaiselvi said...

pasathirku oru yeduthukattu arpudham..

said...

excellent poem

Niranjana said...

migavum arumai
niranjana