Sunday, September 06, 2009

படித்ததில் பிடித்தது:

கிழிந்துபோன பழைய புத்தகம் அது..
அட்டையின் வசீகரத்தால்
வாசிக்கும் வெறியில் நீ..
விடைத்தாள் திருத்தும்
ஆசிரியரின் வேகத்தோடு
புரட்டுகிறாய் அதன் பக்கங்களை..
வேகத்தின் உக்கிரத்தில்
சாயம் இழந்து கொண்டிருந்தது
அதன் வண்ணங்கள்.
இறுதியாய்..
முடித்துவிட்டாய் நீ.
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்.
இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை.

[மின்னஞ்சலில் வந்த கவிதை,அனுப்பியவர் தன் பெயரை வெளியிடவிரும்பவில்லை]

9 comments:

said...

அடடா...நல்ல கவிதைதானே பெயர் சொல்லியிருக்கலாமே!

said...

:) !!

said...

<<<
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்
>>>

ஆஆஆஆஅஅஅ

சூப்பருங்க்கான்னா

said...

படித்ததும் பிடித்தது,
பிடித்ததும் வெடித்தது "மனசு"

said...

நல்ல கவிதை நிலா. அந்த நண்பரிடம் அல்லது தோழியிடம் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்

said...

//இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை//

ந‌ல்ல‌ க‌விதை வாழ்த்துக‌ள்.

said...

nalla ezhuthirukkaanga...:)

Kalaivani said...

kavithai nalla irukku....
en vazhththukkalaiyum therivithu vidukalaen avargal idaththil...

pagirthamaikku nandri.

said...

very nice poem