Friday, January 15, 2010

தற்கொலைக் கவிதைகள்




1.
தற்கொலைக்கு
விஷம் வாங்கிவர பயணிக்கின்றன
என் கால்கள்.
முட்டாள்தனமென்று புத்திசாலிகள்
தூற்றலாம்;
மக்கள்தொகையிலொன்று குறைந்ததென்று
எதிரிகள் மகிழலாம்.
ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள்
நான்கைந்து அழுகைகள்
சில உதடு பிதுக்கல்கள்
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கொஞ்சம் பிரிவுக் கவிதைகள்
இவை எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி
நிகழலாம் இவனது
மரணம்.
விஷம் வாங்கிகொடுத்த
வேலைக்காரனென்று நசுக்கப்படலாம்
நானும்.

2.
தனிமை புணர்
பொறுமை எரி
உலகை புசி
இரவை மிதி
புன்னகை கொல்
மழை துற
நம்பிக்கை உதறு
முற்றும்.

3.
தோல்விகளால் நிரம்பியவன்
வெற்றிகளால் நிரம்பியவனை
சந்தித்தான்
கொஞ்சம் மெளனம்
கொஞ்சம் வன்மம்
கொஞ்சம் பரிகாசம்
கொஞ்சம் நஞ்சு
இருவருக்கும் இடையே
மிதந்து கொண்டிருந்தது. 

கடைசியாக,
அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்.




16 comments:

said...

இதென்ன தற்கொலைகள் பற்றி எல்லோரும் எழுதுகிறீர்கள். இப்போதுதான் அனுஜன்யாவின் பதிவு படித்து இங்கு வந்தேன்.

கடைசி வரிகள் நீங்காமல் நிழலாடும்....

said...

நன்றாக இருக்கின்றது....
முதலாவது மிகப் பிடித்தது...

said...

கவிதை மிக வும் நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்..

said...

மூன்றும் அருமை..

said...

:)
:(
:)

said...

//கடைசியாக,அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன் தோல்வியுடன்//

Nachh!!!!!

said...

irandaavathu kavithai superb

said...

i hate this. . .nila. . .

enaku pudikala. . .

said...

:(

said...

"அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்"

அருமையா இருக்கு நிலா..

said...

//தனிமை புணர்
பொறுமை எரி
உலகை புசி
இரவை மிதி
புன்னகை கொல்
மழை துற
நம்பிக்கை உதறு
முற்றும்.//

வைரமுத்துவின்..."
யாக்கை திரி
காதல் சுடர்...!!"
என்ற கவிதையை நினைவுகூர்ந்தது உங்களின் இந்த முயற்சி..நன்று..?!

said...

கவிதைகள் பிடிக்கவில்லை. தற்கொலை என்ற தலைப்பை எடுத்த காரணத்தால்

said...

வாசித்து பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

said...

ennilai ungal kavidai eaduthu solkirathu... oru naal ennai saartha silaruku ithu oru naal kuripaai irukkum poal theriherathu.. nalla kavithaikku nandri... Ungal kavithai vasikkum ennakku kavidai eluthum pazakkam maranthu poogirathu...

said...

//கடைசியாக,
அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்//
 
:-)

said...

2-vathu nallaayirukku.

3-vathu...,
vinoth... vaazhkkainna....(unga pathivuthaan nu ninaikkiren...)