Thursday, October 07, 2010

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன




1.
ஓர் உன்னதமான நிகழ்வின்
முடிவில் அறையெங்கும் மணம்
நிரப்பியபடி படுத்திருந்தாய்.
கனவில் தோன்றும் கவிதைவரியின்
பூரிப்புடன் கண்கள் மூடி
அமர்ந்திருந்தேன்.
காலமடியில் இசை
வழிந்துகொண்டிருந்தது.
செவி வழி உயிருக்குள்
ஊடுருவியது உனதன்பின்
அணுக்கள்.
மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்
அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.
இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்
நுழைய துவங்கினேன்
நான்.

2,

கடற்கரையொன்றில்தான் நமக்கான
வாழ்வை தீர்மானித்து பிரிந்தோம்.
மழைநாளில்தான் யாரோ ஒருவருடன்
நம்
திருமணம் நிகழ்ந்தேறியது.
வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனத்தின்
நடுவே நம் இல்லம் அமையப்பெற்றது.
இப்போது,
எதற்கென்றே அறியாமல்
அழுகின்ற குழந்தையாய்
அழுதுகொண்டிருக்கிறோம்
அவரவர் வீட்டின் இருட்டறையில்
மனதெங்கும் வியாபித்திருக்கும்
நிறைவேறாக் காதலுடன்.

3.
தவிர்த்தலையும் ரசனையுடன்
என்னில் தெளிக்கிறாய்.
உன் விலகல் ஒரு நட்சத்திரம்
போல் மிளிர்கிறது.
வெறுமை நிறைந்த சொற்களை
உதிர்த்தபடி செல்கிறதுன்
இதழ்கள்.
எவ்வித உணர்வுகளுமின்றி
புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.
மழை சத்தமின்றி பெய்து
ஓய்கிறது.
கண்ணீர் உடைந்த
நிலாத்துளிகளாய் உருள்கிறது.
என்றேனும்
ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்
நீ
லயித்திருக்கும் தருணத்தில்
காற்றில் மிதந்து வரக்கூடும்
சிறகறுந்த கனவொன்றின்
குருதி தோய்ந்த இறகுகள் சில.

-நிலாரசிகன்.

15 comments:

said...

அருமையான கவிதைகள் நிலா. வலி மிகுந்த வரிகள்....//காற்றில் மிதந்து வரக்கூடும்
சிறகறுந்த கனவொன்றின்
குருதி தோய்ந்த இறகுகள் சில.// ஆழமான கவிதை

said...

அருமை நிலா!!!

ரொம்ப ரொம்ப பிடிச்சது.

நீண்ட நாள்கள் கழித்து அனைத்து ருசியுடன் நிலாரசிகன் கவிதை படித்த நிறைவு கிடைத்தது இப்பதிவில்.

Anonymous said...

சிறகறுந்த கனவொன்றின்
குருதி தோய்ந்த இறகுகள் சில

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்.

said...

:)

Neenda natkaluku pin ninaivil kalantha kavithai

said...

என்றேனும்
ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்
நீ
லயித்திருக்கும் தருணத்தில்
காற்றில் மிதந்து வரக்கூடும்
சிறகறுந்த கனவொன்றின்
குருதி தோய்ந்த இறகுகள் சில.


மிக மிக அருமையான வரிகள் . வலிகள் மிகுந்த வரிகள் . நன்றி

said...

/ எவ்வித உணர்வுகளுமின்றி
புன்னகைக்க கற்றுக்கொண்டாய். /

அருமை நிலா ...

மூன்று கவிதைகளும் உள்ளிறங்கி வலிக்கிறது

said...

2nd kavthai super. Especially this lines, எதற்கென்றே அறியாமல்
அழுகின்ற குழந்தையாய்
அழுதுகொண்டிருக்கிறோம்
அவரவர் வீட்டின் இருட்டறையில்
மனதெங்கும் வியாபித்திருக்கும்
நிறைவேறாக் காதலுடன்..

said...

ரொம்ப நல்லாருக்கு

said...

அருமையான கவிதைகள்...
எல்லாம் அருமையாய்...
வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி :)

said...

Migavum Vali miguntha varigal Arumaiyana Kavithaikal Nilaraseegan...

Nandri
Kalaivani

said...

hiyo....yenakku 3 vathu remmmmba pidichchurukku...!

vaazhthukal nila....!

said...

Hi...

Recently i started reading ur poems. only very few can express the pain. U r one among them. Very nice.. Keep going

Saras

said...

அழுகின்ற குழந்தையாய்
அழுதுகொண்டிருக்கிறோம்
அவரவர் வீட்டின் இருட்டறையில்
மனதெங்கும் வியாபித்திருக்கும்
நிறைவேறாக் காதலுடன்.

Superb lines,,,, Dear Nila....

said...

நல்லா யிருக்குங்க. இந்த வார கல்கியில் இவைகளில் இரண்டு கவிதைகள் வெளியாகி உள்ளதற்கும்
வாழ்த்துக்கள்.