Wednesday, September 28, 2011
Sunday, September 25, 2011
கவிதைகள் இரண்டு
1.மினி ப் பெண்
இருள் ஒரு யுவதியின் கண்களை
நினைவூட்டியது.
அடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட
அவளது உடலும் விழியைப் போலவே
திறந்திருந்தது.
செந்நாய்கள் உடலை இழுத்துச்செல்ல
முயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்
மூடிக்கொண்டன.
பல்லிருங்கூந்தல் இந்த இரவாக
அறுபடுகிறது
கண்களை அவள் மூடிய கணத்தில்
உக்கிரமான மழை.
செந்நாய்கள் சிதறி ஓடியதும்
அவள் நேத்திரங்களில் வந்தமர்ந்தன
இருள் மின்மினிகள்.
இப்போது
இசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு
மிதந்து அலைகிறாளவள்.
2.மழைவழிப்பயணம்
அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.
-நிலாரசிகன்.
இருள் ஒரு யுவதியின் கண்களை
நினைவூட்டியது.
அடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட
அவளது உடலும் விழியைப் போலவே
திறந்திருந்தது.
செந்நாய்கள் உடலை இழுத்துச்செல்ல
முயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்
மூடிக்கொண்டன.
பல்லிருங்கூந்தல் இந்த இரவாக
அறுபடுகிறது
கண்களை அவள் மூடிய கணத்தில்
உக்கிரமான மழை.
செந்நாய்கள் சிதறி ஓடியதும்
அவள் நேத்திரங்களில் வந்தமர்ந்தன
இருள் மின்மினிகள்.
இப்போது
இசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு
மிதந்து அலைகிறாளவள்.
2.மழைவழிப்பயணம்
அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.
-நிலாரசிகன்.
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Thursday, September 22, 2011
361 - இரண்டாவது இதழ்
நண்பர்களுக்கு,
361 டிகிரி இரண்டாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸிலும்,நியு புக்லேண்ட்ஸ் கடையிலும் கிடைக்கும். சேலத்தில் பாலம் புத்தக கடையில் நாளையிலிருந்து கிடைக்கும். இதழில் பங்கெடுத்த படைப்பாளிகளுக்கும் சந்தாதாரர்களுக்கும் இதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதழ் வேண்டுவோர் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு பணவிடை/காசோலை/online transfer செய்துவிட்டு 361degreelittlemagazine@gmail.
ஆண்டுச் சந்தா: ரூ.200
Name S.V.P.Rajesh
Account Num: 05001610013962
Bank Name HDFC BANK
City CHENNAI
Branch Location KOTTIVAKKAM, CHENNAI
MICR Code 600240020
IFSC Code HDFC0000500
Account Type Savings
மூன்றாம் இதழுக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. டிசம்பரில் அடுத்த இதழ் வெளிவரும்.
நண்பர்களின் தொடர்ந்த ஆதரவும்,நட்புமே நாங்கள் செயல்படுவதற்கான காரணிகள்.
நன்றி.
Monday, September 05, 2011
குறி சிற்றிதழ் கவிதைகள்
1.விசித்திரி
நதியின் மேல் விழுகின்ற
மழைத்துளிகள் பருகி வளர்ந்த
அச்செடி
தன் விசித்திர பெயரின் அர்த்தங்களை
யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.
நதியில் நீராடும் பேரானந்த கணங்களிலும்
தன் மேல் வந்தமரும் நீர்ப்பறவைகளுடனான
உரையாடலின்போதும் புதிர் நிரம்பிய
பெயரின் காரணத்தை மறைத்துக்கொண்டது.
அனல் நிறைந்த கடுங்கோடையொன்றில்
மீன்களின் பசிக்கு உணவாகியபோது
அதன் விசித்திர பெயரும் உணவுடன்
கலந்து கரைந்தது.
நதிக்கரையில் ஒதுங்கிய மீன்களை
பொறுக்கி சென்றவள்
மறுநாளின் அதிகாலையில்
தன் பெயர் விசித்திரி என்றாள்
உடலெங்கும் வளர்ந்த புதர்ச்செடியுடன்.
2.மழையில் நனையும் வயலின்
சொட்ட சொட்ட நனைந்தபடி
இசையால் ஓவியங்கள்
வரைந்துகொண்டிருந்தான் அவன்.
இசைக்கம்பிகளில் நகர்ந்து வரும்
துளியொன்றை அசைவின்றி
பார்க்கிறாள் யுவதியொருத்தி.
மெல்ல அருகில் வருமவள்
தன் சிறுவிரல் நகத்தில் வயலின் சிந்தும்
துளியை பெற்றுக்கொள்கிறாள்.
கண்கள் திறந்தவனின் முன்பு
துளியுடன் நிற்கிறாள்.
மீண்டும் இசைக்கிறான்
வயலினாக அவளும் துளியாக
அவனும் பிணைந்து இசையாகிறார்கள்.
பழுதடைந்த அந்த வயோதிக வயலின்
யாருமின்றி இசைத்துக்கொண்டே இருக்கிறது
இதைப்போன்று ஆயிரம் கதைகளை.
-நிலாரசிகன்
[இம்மாத குறி சிற்றிதழில் வெளியான கவிதைகள்]
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Saturday, September 03, 2011
361 டிகிரி - இரண்டாவது இதழ்
அன்பின் நண்பர்களே 361டிகிரி இரண்டாவது இதழ் தயாராகிவிட்டது 50 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளோடு வரும் செப்டம்பர் 11(ஞாயிற்று கிழமை)முதல் கடைகளில் கிடைக்கும் .தொடர்ந்து புதிய படைப்பாளிகள் உருவாகவும் ,படைப்பாளிகள் இயங்கவும் 361டிகிரி இதழ் தளமாக அமையும் .முதல் இதழிற்கு கிடைத்த வரவேற்பும் ,கவனமும் தொடர்ந்து இதழ் வெளிவருவதற்க்கான சாத்தியங்களை தந்தது மகிழ்ச்சி.
இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள் .
361degreelittlemagazine@gmail.com
அன்பும், நன்றியும் .
நரன் & நிலாரசிகன்
இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள் .
361degreelittlemagazine@gmail.
அன்பும், நன்றியும் .
நரன் & நிலாரசிகன்
Thursday, September 01, 2011
உயிர் எழுத்து கவிதைகள்
1.இலை
அங்குமிங்கும் அலைவுறும்
இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித்தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையை தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள்.
அசைவற்று கிடக்கிறது இலை.
2.நிகழ்தல் என்பது
ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருப்பதை
உணர்கொம்புகள் உணர்த்துகின்றன.
ஒவ்வொரு அறையாக
செல்கிறேன்.
முதல் அறையில் இரண்டு புகைப்படங்கள்
சுவரில் தொங்குகின்றன.
அவைகளில் சலனமில்லை.
இரண்டாம் அறையின் உட்புறம்
சன்னல்கள் இரண்டு மெல்ல பேசிக்கொள்கின்றன.
அருகில் செல்கிறேன்.
இளம் புணர்ச்சியொன்றை கண்ணுற்ற கதையை
அவை பேரானந்தத்துடன் பகிர்ந்துகொள்கின்றன.
மூன்றாம் அறை பூட்டப்பட்டிருக்கிறது.
நான்காம் அறையில் மெழுகொன்று
தன் இறக்கைகளை விரித்து அழுதுகொண்டிருக்கிறது.
மெதுவாய் கண்கள் திறக்கிறேன்
இதயத்தின் நான்கு அறைக்குள்ளிருந்தும்.
3.மார்புக்காலம்
மலைகள் சூழ்ந்த அருவிக்கரையில்
கச்சை சரி செய்யும் பேரிளம் பெண்
தன் மார்புகளில் வழிகின்ற
நீரின் வழியே வருடங்கள் பல
பின்னோக்கி நகர்ந்து முதன் முதலாய்
நீராடிய குளக்கரையின் படித்துறைக்கு
செல்கிறாள்.
குளத்தில் மிதக்கும் தாமரை இலைகளின்
நடுவே சிறிமியொருத்தி நீந்தும் தருணம்
மொட்டொன்று மலர்வதை மிகுந்த
வலியுடன் தாங்கிக்கொள்கிறது குளம்.
மார்புகளில் வழிகின்ற துளிகளுடன்
வீட்டிற்கு செல்லுமவள்
மெளனத்தின் அறைக்குள் ஒளிந்துகொள்கிறாள்.
சிறுமியிலிருந்து யுவதிக்கும்
யுவதியிலிருந்து பேரிளம் பெண்ணுக்கும்
இடையே வெளவ்வாலாக தொங்குகிறது
மார்புக்காலம்.
4.அரூபவெளி
சிதைந்த கல்லறையின் மேல்
படுத்திருக்கும்
சாம்பல் பூனையின்
கூரிய நகங்களும் பற்களும்
இப்போது உறங்கிக்கொண்டிருக்கின்றன.
புதர்ப்பறவையொன்றின் கண் திறக்காத
இரண்டு குஞ்சுகளை தின்று விட்ட
பெரு நிம்மதியுடன் உறங்குகிறது.
தட்டானை அலகிடுக்கில் பிடித்துக்கொண்டு
கூடு திரும்பிய சிறுபறவை
தன் குஞ்சுகளை தேடுகிறது.
உதிர்ந்த இறகுகளும் கடித்து துப்பிய
பிஞ்சுக்கால்களும் கண்டு
கதறி அழுகையில்
அலகிலிருந்த தட்டானின் பிணம்
இறகில் விழுகிறது.
கல்லறைக்குள் நுழைகின்றன
நான்கு அரூபங்கள்.
5.வதை
இரண்டு கால்களையுடைய
மிருகம் எப்போதும் என்னுடன்
பயணித்தபடியே இருக்கிறது.
அதன் கூர்மையான கொம்புகளில்
நெளிகின்ற கருஞ்சிவப்பு நிற
சர்ப்பத்தின் பார்வை
என்னை நோக்கி குவிந்திருக்கிறது.
ஒரு பெரும் சுமையை இழுத்தபடி
நடக்கின்ற என் பாதையெங்கும்6
குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன
சின்னஞ்சிறு மிருகங்கள்.
நீண்டு விரிந்த பச்சை வெளியொன்றை
கடக்கும் பொழுது உணர்கிறேன்
மிருகமொன்றின் நிழலாக
நானிருக்கிறேன் என்பதை.
6.எதிர் விசை
மழை ஓய்ந்த இருளில்
ஈரம் பொதிந்த சாக்குப்பைகளின் வழியே
கசிந்துகொண்டிருக்கும் முனகல்கள்
மூன்று நாய்க்குட்டிகளுக்கானவை.
குளிரிலும் அசைவிலும்
ஒடுங்கியிருக்கும் அவைகளை இப்போது
கொன்றாக வேண்டும்.
முதலில் வெண்ணிற குட்டி
அதன்பின் பழுப்பு
கடைசியாக கருமை நிறம்.
நீண்ட ஒற்றையடிப்பாதையின்
இரு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள்
சரசரத்துக்கொண்டிருந்தன.
சுழித்தோடும் ஆற்றுநீரை நோக்கி
பயணப்படுகையில்
நெளிந்து கடந்தது சர்ப்பம்.
-நிலாரசிகன்.
[இம்மாத உயிர் எழுத்து(செப்டம்பர் 2011) இதழில் வெளியான கவிதைகள்]
அங்குமிங்கும் அலைவுறும்
இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித்தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையை தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள்.
அசைவற்று கிடக்கிறது இலை.
2.நிகழ்தல் என்பது
ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருப்பதை
உணர்கொம்புகள் உணர்த்துகின்றன.
ஒவ்வொரு அறையாக
செல்கிறேன்.
முதல் அறையில் இரண்டு புகைப்படங்கள்
சுவரில் தொங்குகின்றன.
அவைகளில் சலனமில்லை.
இரண்டாம் அறையின் உட்புறம்
சன்னல்கள் இரண்டு மெல்ல பேசிக்கொள்கின்றன.
அருகில் செல்கிறேன்.
இளம் புணர்ச்சியொன்றை கண்ணுற்ற கதையை
அவை பேரானந்தத்துடன் பகிர்ந்துகொள்கின்றன.
மூன்றாம் அறை பூட்டப்பட்டிருக்கிறது.
நான்காம் அறையில் மெழுகொன்று
தன் இறக்கைகளை விரித்து அழுதுகொண்டிருக்கிறது.
மெதுவாய் கண்கள் திறக்கிறேன்
இதயத்தின் நான்கு அறைக்குள்ளிருந்தும்.
3.மார்புக்காலம்
மலைகள் சூழ்ந்த அருவிக்கரையில்
கச்சை சரி செய்யும் பேரிளம் பெண்
தன் மார்புகளில் வழிகின்ற
நீரின் வழியே வருடங்கள் பல
பின்னோக்கி நகர்ந்து முதன் முதலாய்
நீராடிய குளக்கரையின் படித்துறைக்கு
செல்கிறாள்.
குளத்தில் மிதக்கும் தாமரை இலைகளின்
நடுவே சிறிமியொருத்தி நீந்தும் தருணம்
மொட்டொன்று மலர்வதை மிகுந்த
வலியுடன் தாங்கிக்கொள்கிறது குளம்.
மார்புகளில் வழிகின்ற துளிகளுடன்
வீட்டிற்கு செல்லுமவள்
மெளனத்தின் அறைக்குள் ஒளிந்துகொள்கிறாள்.
சிறுமியிலிருந்து யுவதிக்கும்
யுவதியிலிருந்து பேரிளம் பெண்ணுக்கும்
இடையே வெளவ்வாலாக தொங்குகிறது
மார்புக்காலம்.
4.அரூபவெளி
சிதைந்த கல்லறையின் மேல்
படுத்திருக்கும்
சாம்பல் பூனையின்
கூரிய நகங்களும் பற்களும்
இப்போது உறங்கிக்கொண்டிருக்கின்றன.
புதர்ப்பறவையொன்றின் கண் திறக்காத
இரண்டு குஞ்சுகளை தின்று விட்ட
பெரு நிம்மதியுடன் உறங்குகிறது.
தட்டானை அலகிடுக்கில் பிடித்துக்கொண்டு
கூடு திரும்பிய சிறுபறவை
தன் குஞ்சுகளை தேடுகிறது.
உதிர்ந்த இறகுகளும் கடித்து துப்பிய
பிஞ்சுக்கால்களும் கண்டு
கதறி அழுகையில்
அலகிலிருந்த தட்டானின் பிணம்
இறகில் விழுகிறது.
கல்லறைக்குள் நுழைகின்றன
நான்கு அரூபங்கள்.
5.வதை
இரண்டு கால்களையுடைய
மிருகம் எப்போதும் என்னுடன்
பயணித்தபடியே இருக்கிறது.
அதன் கூர்மையான கொம்புகளில்
நெளிகின்ற கருஞ்சிவப்பு நிற
சர்ப்பத்தின் பார்வை
என்னை நோக்கி குவிந்திருக்கிறது.
ஒரு பெரும் சுமையை இழுத்தபடி
நடக்கின்ற என் பாதையெங்கும்6
குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன
சின்னஞ்சிறு மிருகங்கள்.
நீண்டு விரிந்த பச்சை வெளியொன்றை
கடக்கும் பொழுது உணர்கிறேன்
மிருகமொன்றின் நிழலாக
நானிருக்கிறேன் என்பதை.
6.எதிர் விசை
மழை ஓய்ந்த இருளில்
ஈரம் பொதிந்த சாக்குப்பைகளின் வழியே
கசிந்துகொண்டிருக்கும் முனகல்கள்
மூன்று நாய்க்குட்டிகளுக்கானவை.
குளிரிலும் அசைவிலும்
ஒடுங்கியிருக்கும் அவைகளை இப்போது
கொன்றாக வேண்டும்.
முதலில் வெண்ணிற குட்டி
அதன்பின் பழுப்பு
கடைசியாக கருமை நிறம்.
நீண்ட ஒற்றையடிப்பாதையின்
இரு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள்
சரசரத்துக்கொண்டிருந்தன.
சுழித்தோடும் ஆற்றுநீரை நோக்கி
பயணப்படுகையில்
நெளிந்து கடந்தது சர்ப்பம்.
-நிலாரசிகன்.
[இம்மாத உயிர் எழுத்து(செப்டம்பர் 2011) இதழில் வெளியான கவிதைகள்]
Labels:
அறிவியல் புனைக்கதை,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Subscribe to:
Posts (Atom)