Wednesday, September 28, 2011

கொம்பு சிற்றிதழ் கவிதைகள்

1.தரு

எதிரெதிர் திசைகளில் பறக்கும் பறவைகளின்
எச்சத்திலிருந்து முளைத்த தரு
கிழக்கிலொரு கிளையும்
... மேற்கிலொரு கிளையுமாக விரிந்து நிற்கிறது.
திசைகளில் தொலைந்த பறவைகளை
வேர்களின் பயணத்தில் கண்டுபிடித்திட
முயல்கிறது.
முடிவற்ற பயணத்தின் தோல்வியில்
காகமொன்றின் நிரந்தர கூடாக மாறி
மெளனித்து காலம் கடத்துகிறது.
இக்கணம்,
என்னை உற்றுநோக்கும்
இச்சிறு பென்சில் எந்த தருவின்
சுட்டுவிரல்?
உயிரற்ற விரல் வழி
தன் சரிதம் சொல்லிக்கொண்டிருக்கிறது
எப்போதோ சரிந்த தரு.

2.நிழல்களுடன் பேசுபவன்

நிழல்களுடன் பேசுபவன்
தன் இடக்கையில்
வண்ணத்துப்பூச்சியொன்றை வரைகிறான்.
ஒவ்வொரு நிழலுடன்
பேசும்பொழுது அது சிறகடித்துக்கொள்கிறது.
உக்கிர வெப்பம் பாதங்களின் வழியே
அவனுள்ளேறும்போது
சிறகை உதிர்த்துக்கொள்கிறது.
கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொண்டு ஊமையாகிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.

-நிலாரசிகன்.

3 comments:

said...

கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொண்டு ஊமையாகிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.

said...

தரு - is so nice Kavithai :)

நிழல்களுடன் பேசுபவன்

கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொண்டு ஊமையாகிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.

Excellent Line Nila :)

said...

கவிதைகள் அருமை.
எழுத்து மிகவும் சிறியதாக இருப்பதால் படிக்க சிரமாக இருக்கிறது.