Thursday, January 31, 2008

மறக்கப்படுதலுக்கான உரையாடல்...

வேலைக்காரிக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தேர்ச்சி பெற்றார்
பாட்டி.

வேலைக்காரனுக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தோல்வி அடைந்தார்
தாத்தா.

அடுக்களை கிடைத்தது
பாட்டிக்கு.
திண்ணை கிடைத்தது
தாத்தாவுக்கு.

மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.

7 comments:

said...

Valikirathu manasu.. palli vayathil en varavirkaga chocolate-tutan kathiruntha thathavai-um, ammavirkku mel kavanithu, naan vunavarunthatha pothu kavalai padum pattiyei -um ninaikum pothu!!!!

said...

நெஞ்சைத் தொடும் வரிகள்...

said...

நன்றி பிரஹாரிகா,சேது.

said...

//மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.//

said...

உங்கள் உணர்வின் வலியால் எழுதப்பட்ட இந்த கவிதையை படிக்கும் அனைவரையும் உணர வைக்கும்..

தினேஷ்

said...

//மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.//

இவைகளை பேனாவில் மையிட்டு எழுதினீரா இல்லை கண்ணீர் விட்டு எழுதினீரா?

said...

//மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.//

இவைகளை பேனாவில் மையிட்டு எழுதினீரா இல்லை கண்ணீர் விட்டு எழுதினீரா?