Wednesday, June 24, 2009

மழையில்லா முன் தினம்...




வடிகின்ற கண்ணீர்த்துளியுடன்
மரமொன்றை செதுக்கிக்கொண்டிருந்தான்
அந்த தச்சன்.
கூடை நிறைய முட்கள்
சுமந்து தள்ளாடியபடி
இருளுக்குள் மறைந்தாள்
ஒரு மூதாட்டி.
வழிந்தோடும் ரத்தத்தை
கனவுகளில் தெளித்து
உறங்கினர் குழந்தைகள்.
நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.

5 comments:

Anonymous said...

:-(

said...

:~(

Kalaivani said...

"மழையில்லா முன் தினம்..."

//நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.//

Nalla Iruku....

said...

naan ennathanga solluven..
vaayadachip poitten...

aanaal..onnu ithu neengathaan yezhuthiningalaanu ketkamaatten:)

vazhththukal nila..

said...

//நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.//

ஆழமான வரிகள்..!