Friday, March 12, 2010

கடித விமர்சனம்



(என்னுடைய சிறுகதை நூலிற்கு வாசகி ஒருவர் நீண்ட விமர்சன மடல் எழுதியிருக்கிறார்.அவரது அனுமதியுடன் அதனை இங்கே பதிவிடுகிறேன்.விமர்சனத்திற்கு நன்றிகள் பல :)

அன்புள்ள நிலாரசிகன்,

உங்கள் "யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்" நூல் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகுதான் எனக்கு கிடைத்தது. அனைத்து கதைகளுமே அருமை. உங்கள் கதை நடை எங்குமே சிறு சலிப்பையும் உண்டாக்கவில்லை. வாழ்த்துக்கள் நிலாரசிகன். சில கதைகளுக்கு என் கருத்துக்கள் இங்கே...

யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்: கதை படிக்கும்போதே மனதை ஒரு பெரும் சுமை அமிழ்த்திவிடுகிறது. அதிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. சிறுமியின் வலி நிறைந்த முகம் இன்னும் கண்களில் நிழலாய் இருக்கிறது. புனைவுகளைத் தாண்டி நிஜத்தை கண்முன் நிறுத்தும் மிகச்சிறந்த கதை.

சங்க மித்திரை: உறவுகளால்/ உறவுகளுக்காய் உதித்த கதை. புரிந்துகொள்ள முடியாத சில உறவுகளை மிக அழகாய் கூறியிருக்கிறீர்கள் நிலாரசிகன். கதை படிப்பவரின் எண்ணங்களை புரட்டிப்போடும் கடைசி இரு வரிகளில்தான் கதையின் உயிர் இருக்கிறது.

வேட்கையின் நிறங்கள்: இதுவரை நான் வசித்த உங்களின் படைப்புகளில் சற்று வித்தியாசமான கதை. நெருடலான விஷயங்களை மிக வெளிப்படையாக மனம் ஏற்கும்படி எழுதி இருக்கிறீர்கள். ஆனாலும் எல்லோரும் விரும்புவார்கள் என்று நிச்சயமாக சொல்லமுடியவில்லை. "அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது" என்று முடித்திருக்கிற விதம் மிக அருமை.

வேலியோர பொம்மை மனம்: அருமையான நடை. சிறுமியின் வாழ்க்கையை உங்கள் வரிகளில் உணர முடிந்தது. உண்மைக் கதை போலவே இருக்கிறது. உண்மைக் கதைதான். ராணுவ வீரனும், வெள்ளை மனதுடைய குழந்தையும் நெஞ்சில் நிற்கிறார்கள்.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்: மிக மிக அற்புதமான கதை. இது கதையாக மட்டுமே இருந்தால் சந்தோஷம். கதை படித்தவுடன் ஒரு படம் பார்த்த உணர்வு. உங்கள் கடைசி வரி திருப்பங்களுக்கு பெரிய ரசிகை ஆகிவிட்டேன்.

ப்ரியாகுட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு: அழகாக தொடங்கி அதிர்ச்சியில் முடிந்த கதை. மனதை மிகவும் பாதித்தது. கதையை முடிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது. சில நிஜங்களை ஜீரணிக்க முடிவதில்லை. எப்போதும் மனதில் இருக்கும் கதைகளில் இதுவும் ஒன்று நிலாரசிகன்.

சேமியா ஐஸ்: இயல்பான சிறுவனின் ஆசை. சின்னம்மாவிடம் அவன் மாட்டிக்கொண்டு படும்பாடு சில இடங்களில் ரசிக்கும்படி இருக்கிறது. சில சமயம் வேதனையாக இருக்கிறது. படிப்பவர்களை பால்யத்திற்குள் அழைத்துச் செல்லும் கதை.

வால் பாண்டி சரித்திரம்: மற்றுமொரு பால்யம் :). வால் பாண்டியை பக்கத்து வீட்டு சிறுவனாய் கண்முன் நிறுத்துகிறது உங்கள் கதை. நிச்சயமாய் கதை படிப்பவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை திரும்பிப் பார்த்திருப்பார்கள். மிக ரசித்தேன்.

சைக்கிள்: சைக்கிளுக்கு பெயர் வைப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். டைகருக்குத் தான் ஏதோ ஆகப்போகிறது என்று நினைத்தால் கதை இப்படி முடிந்துவிட்டது. கதை சொன்ன சிறுவனைவிட அந்த சைக்கிளும் அப்பாவுமே மனதில் இருக்கிறார்கள். கதைக்கான கருவை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம்.
தனலட்சுமி டாக்கீஸ்: அன்றாட வாழ்வில் நாம் கடக்கும் எதையும் கதையாக்கும் லாவகம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நவீனமயமாதலின் வலியை எழுத்தில் தந்திருக்கிறீர்கள். தனலட்சுமியோடு தனலட்சுமி டாக்கீஸும் போய்விட்டதை உணர்வுபூரமான் கதையாய் சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் ஊர் கொட்டகையும் மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. அந்த வெற்றிடத்தை கடக்கும்போதெல்லாம் இந்த கதை ஞாபகம் வரலாம்.
தாய்மை: மிக மிக அருமையான கதை. தாய்மையை அத்தனை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். நெஞ்சம் நெகிழ்ந்தது. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
பட்டாணி: "இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஊருக்குள் திருட்டு நடப்பது குறைந்துபோனது." இந்த ஒரு வரியில் தான் இருக்கிறது கதையின் ஜீவன். மிகச்சிறந்த கதை.
ஆலம்: விதவைத்தாயின் பரிவும்,பாசமும் அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். மற்ற கதைகள் போலவே கடைசிவரியில் உள்ளம் நெகிழ்ந்தது.தலைப்பு ரொம்ப பொருந்துகிறது.
தூவல்: பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லாமும் சொல்லி இறுதிவரை உடன்வரும் ஒரு பேனாவை பற்றிய கதை. ஒரு சிறு பேனாவைக் கொண்டு மிக அழகாய் கதை சொல்லி இருக்கிறீர்கள். தூவலின் அர்த்தம் எதேச்சையாக கேள்விப்பட்டபோது பேனாவிற்கு இப்படியும் ஒரு பெயர் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
அப்பா சொன்ன நரிக்கதை: இந்தக் கதையை உங்கள் வலைப்பூவில் படித்தபோதே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன். கடைசி வரி முகத்தில் அறைந்தது. இருமுறை படித்தபின்பே புரிந்தது.
சம்யுக்தை: காதலின்/இழப்பின் வலியை வார்த்தைப்படுத்தி இருக்கிறீர்கள்.  ஒரு ஏழை இளைஞனின் வாழ்க்கையை காதல் புரட்டிப்போடுவதை சொல்லி இருக்கிறீர்கள்.
மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட்: நல்லவேளை இதை உங்கள் சிறுகதை தொகுப்பில் படித்தேன். இல்லையென்றால் இதை ஒரு கட்டுரை அல்லது நூல் விமர்சனம் என்றே நினைத்திருப்பேன். அருமையான் அறிவியல் கதை. உங்கள் கடைசி வரியின் குறும்பை ரசித்தேன். இதைப்போன்ற ஒரு படைப்பை இப்போதுதான் படிக்கிறேன். மேலும் இதைப்போல் தொடர்ந்து எழுதுங்கள்.

இவை என் எண்ணம் மட்டுமே. தவறாக இருப்பின் மன்னித்துவிடுங்கள்.
நட்புடன்,
XXXXXX


(பெயர் வெளியிட விரும்பவில்லை)

-------------------------------------------------------------------------------------------------------------------


நூலை இணையத்தில் பெற இங்கே செல்லவும்.
தமிழகத்தின் அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். சென்னையில் கிடைக்கும் இடங்கள்:

HIGGINBOTHAMS PVT.LTD
NO.116 ANNA SALAI
CHENNAI 600 002
NEW BOOKLANDS,CHENNAI
No.52C,BASEMENT,NORTH USMAN ROAD,
NEAR PANAGAL PARK, TNAGAR,
CHENNAI 600017
SREE KRISHNA TRADERS,
NO.2 IIND MAIN ROAD,
GANDHI NAGAR,
ADYAR, CHENNAI 600 020
SRI SATHYA SAI EXPORT
#7(3/2) MALAYAPPAN STREET,
SEVENWELLS, CHENNAI 600 001
MOGAPPAIR BOOK WORLD,
NILGIRIS COMPLEX,
MOGAPPAIR EAST,
CHENNAI 600 037
BOOKS CORNER,
AB BLOCK, IIND AVENUE,
ANNA NAGAR,
CHENNAI 600 040
DHANALAKSHMI NEWS MART
ARYAGOWDA ROAD,86 /57
WEST MAMBALAM,
CHENNAI 600033
SANDHYA BOOK PALACE
NO.63 JENNIS ROAD, SAIDAPET,
CHENNAI 600015
EASWAR BOOKS
ARCHANA ARCADE, NEW NO#27(OLD 16),
NATESAN STREET, T.NAGAR,
CHENNAI 600017
SKANDASHRAMAM
NO.1 KAMBAR STREET.
MAHALAKSHMI NAGAR, SELAIYUR,
CHENNAI 600 073
DISCOVERY BOOK PALACE,
6 MAHAVIR COMPLEX,IST FLOOR,
MUNNUSWAMY SALAI, WEST K K NAGAR,
CHENNAI 600078

 -நிலாரசிகன்.

5 comments:

said...

எனக்கு இன்னும் நீங்க அனுப்பலை...
அப்புறம் எப்படி படிக்கிறது..... :)

said...

மிக்க மகிழ்ச்சி.. அடுத்த தொகுப்பிற்கு தயாராக வாழ்த்துகள்.
ஏற்கனவே சொல்லியிருக்கிறென் என நினைக்கிறேன். பல கதைகளில் "மாட்டுக்காடி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன் :-)
அனைத்து கதைகளுமே அற்புதம்

said...

vaazhthukal.........nila :)

kadithangal yeppothu sugamaanavai!

said...

நிலாரசிகனின் கதைகளுக்கு ரசிகையின் விமர்சனம் அருமை.

said...

நிலாரசிகனின் கதைகளுக்கு ரசிகையின் விமர்சனம் அருமை.