Tuesday, March 16, 2010

கடலை உறிஞ்சிய மழைத்துளி



நவீனள்                

நீண்ட குழலில் அவள்
சூடியிருக்கும் மல்லி நெருப்பின்
நிறத்தை ஒத்திருக்கிறது.
நிலைகுத்திய கண்களுடன்
அடைபட்ட கதவுகளின்
முன் நிற்கிறாள்.
அடர்ந்த மழையின் நடுவே
சத்தமிட்டு சிரிக்கும் அவள்
தன் வலிகளை கையிலிருக்கும்
கொலுசிற்கு இடம்பெயர்த்துக்கொண்டிருக்கிறாள்.
மற்றபடி,
நகரின் மீதோ கணவன் மீதோ
மார்பை பிய்த்து எறியவில்லை.


கவிஞன்

அறையெங்கும்
சொற்களால் ஆன வனம்
வளர்ந்திருக்கிறது மிக அடர்த்தியாய்.
வனத்தினூடே ஓடுகிறது
நினைவின் நதி.
நதியின் மேல் பறக்கின்றன
கவிதைப் பறவைகள்.
பறவையிலிருந்து நீங்கிய
இறகொன்றின் மீதமர்ந்து
அறைக்குள் நுழைந்து
மரணித்தவனின் காலடியில்
மண்டியிடுகிறது நீலவானம்.
அநாதைப் பிணம் என்கிறது
உலகம்.

கடலை உறிஞ்சிய மழைத்துளி

கூரை விழுந்தபொழுதில்
மழைபற்றிய உன் உரையாடல்கள்
ரசிக்கத் தவறினேன்.
தவறிய முதல் கணத்தில்
துவங்கிய யுத்தம்
வெவ்வேறு ரூபங்களில் நடைபெற்றது.
யுத்தத்தில் வென்ற களிப்பில்
தொடுவானத்தின் கீழ்
தனியே நடக்கிறாய்.
உன் காயங்களில் விழுந்து
மரணிக்கின்றன மழைத்துளிகள்.
இனியேனும் உணர்ந்துகொள்
எப்போதும் ரசிப்பதற்கல்ல
மழையென்று.

செந்நிற இரவு

வேட்டைநாயின் சாயல்களை
கொண்டிருந்த இரவொன்றில்
மரத்தடி சருகுகளின் நடனம்
நடந்தேறியது.
மூன்றாம் சாமத்தில் அவ்விடம்
வந்த கிழவன்
சத்தமிட்டு சிரிக்க துவங்கியபோது
இரண்டாக உடைந்து
பிளந்தது இரவு.
இரவுக்குள்ளிருந்து வெளிக்குதித்த
மிருகங்கள் வானம் பார்த்து
ஊளையிட்டன.
கருமை நிறத்திலிருந்து
சிகப்பு நிறத்திற்கு
என்னிரவு மாறிய கணத்தில்,
நம் முதல் சந்திப்பை பற்றிய
கனவிலிருக்கிறாய்
நீ. 
- நிலாரசிகன்

13 comments:

said...

கவிஞன்...
கடலை உறிஞ்சிய மழைத்துளி...

2 me remba pidiththathu..

m..
ini mazhai vanthuchchaanu naan kekkave maatten.........:)

vazhthukal nila...:)

said...

hiyo..,
nila yaattaiyum maattikkaathaa....

[naan padaththaip paarththu sonnen..:)]

said...

//m..
ini mazhai vanthuchchaanu naan kekkave maatten.........:)
//

I know you will not ask,because you have got the answer from oliyavar :)

said...

கவிஞன்...
கடலை உறிஞ்சிய மழைத்துளி...

arumai nanba. varikku vari kavinayam.

Super Kavithaigal.

said...

Nandri Kumar :)

said...

நிலா,
தலைப்பு, வரிகள், எல்லாமே அசத்தல்..:))))))))

said...

செந்நிற இரவுகள் பிடித்திருந்தது.

said...

illa naan yethum oliyavanta kekkala......

said...

செந்நிற இரவு ரொம்ப பிடித்திருக்கிறது.

said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி :)

said...

ரசிக்கிறேன்

-ப்ரியமுடன்
சேரல்

said...

கலக்கல் நண்பரே !
அருமையான சிந்தனை !

said...

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !


மீண்டும் வருவான் பனித்துளி !