Monday, December 19, 2011

படித்ததில் பிடித்தது:


இன்னும் தன் அம்மாவிடம்
சொல்லவில்லை
தான் குழந்தை உண்டாயிருப்பதை
ஓரிரு நாளில் அவள்
சொல்லிவிடக்கூடும்
அம்மாவிடம்
அம்மா சொல்வதற்கு
என்ன இருக்கிறது
இருக்கத்தான் செய்கிறது
எப்போதும்
இலையின் பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்வதற்கு
ஏதோ ஒன்று
எப்போதும் இருக்கிறது.
பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோஒன்று.

-தேவதச்சன்
- "இரண்டு சூரியன்" தொகுப்பிலிருந்து.

1 comments:

said...

ஏற்கனவே படித்து விட்டேன். மிக அருமையான கவிதை :)

வாழ்வின் யதார்த்தத்தை அழகாக எழுதி உள்ளார்.