Thursday, November 15, 2007

அவளுக்கு தேவதை என்று பெயர்...



1. உணவருந்தும் முன்
ஒரு நிமிடம்
கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.
ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.

2.ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.
ஆற்றுமீன்கள் எல்லாம்
துள்ளிவிழுந்து மரிக்கின்றன..
பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..

3. உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!

4. படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.
படபடக்கும் உன்
விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.
பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.

5. தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..
பன்னீர்பூ மரத்திற்கு
யார் சொன்னது உன் வருகையை?

10 comments:

said...

arumayaaana kavidaigal. idu pool innum pala thodara iraivanai praarthikkiraen.

vaazhthukkal

said...

//3. உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..//

அடடா! எவ்வளவு மென்மையாக ஒரு காதல்.

//எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!//

அசத்தலான வரிகள்.

- சகாரா.

Anonymous said...

//விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.
பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.//


Superb....

Anonymous said...

Miga arumai... Great going...

said...

hello sir..........
u did a nice job............
ur poems-forever&ever............

said...

//உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!//

மிகவும் ரசித்தேன் !!! :))

Anonymous said...

தமிழ்

தமிழுக்கு அமுதென்று பெயர்
என் உயிருக்கு தமிழென்று பெயர்

அன்புடன்
பட்டிக்காட்டு தமிழன்,
ஏ. ஏழுமலை

said...

read many of ur poems today only... nice... this one s especially nice..lov poems are with real expressins ,, superb..

Anonymous said...

god , such a brilliant wordings yaar,,, iam love-in it

said...

kadaisi kavithai kalakkal..........