Tuesday, November 20, 2007

காதலுக்கும் வலிக்கும் காதலர்களே!




பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக...

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக...

கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களாக...

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணீராக...

வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதியதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல், காதலாக..

8 comments:

said...

விட்டுப்போன பத்தி:

எழுத்துக் கோர்த்து
வார்த்தையாகி
வலைகளில் மலர்கிறது
நிலாரசிகன் கவிதையாக...

said...

very nice

Anonymous said...

nijangalai nilaiyaakuvadhu amaidhulladhu ikkavidhai.I WOULD LIKE TO KNOW YOUR REAL NAME.

said...

காற்றில் விரவிய சில உண்மைகள் இங்கே வார்த்தைகளாய்...

- சகாரா.

said...

தினம் தினம் விடிகின்றது
உன் கவிதைகளில் சேவல் குடிகொண்டதால் தானோ?
பாடகனுக்கு குரல் தேவை
ரசிப்பவனுக்கு செவிகள்தேவை
எழுத்தாளருக்கு சிந்தனை தேவை.
சிந்தனைக்கு கவிதை தேவை
கவிதைக்கு இந்த நிலா ரசிகன் தேவை

said...

Its really fantastic. And the lines....

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணீராக...

No words to explain my feel.. I bet everyone will feel the pain in
their heart when they read it...

said...

mm.

said...

:)