
துறுதுறுன்னு இருப்பாக
குறுகுறு பார்வ பாப்பாக...
நீ பொறந்த சேதிகேட்டு,
வெளியூரு போனவுக ஓடோடி
வந்தாக...
புள்ள உன் மொகத்த
பார்த்து என் காதுல
"எனக்கு பொறந்தது
பொண்ணு இல்ல பஞ்சுல
செஞ்ச செல"ன்னு சொல்லி
பூப்பூவா சிரிச்சாவுக...
கறைவேட்டியில தொட்டில
கட்டி நீ தூங்கற சொகத்த
விடிய விடிய பார்ப்பாவுக...
பொட்டபுள்ள உன்ன வள(ர்)க்க
படாதபாடு பட்டாவுக..
காலேசுக்கு நீ போக
கட்டவிரலு தேய தேய
சைக்கிள் மிதிச்சாவுக.....
ஒத்தப்புள்ள உன்ன
கண்ணுக்குள்ள வச்சு
வளத்தாக....
பெத்தபுள்ள கேட்டதெல்லாம்
சலிக்காம வாங்கி
தந்தாவுக...
கட்சி கட்சின்னு அலைஞ்சாக
பட்டி தொட்டியெல்லாம் போனாவுக..
காலேசுல நீ பட்டம்
வாங்கறத பார்க்க
ஆசைப்பட்டு வந்தவுகள
வார்த்தையால சாகடிச்சுபுட்டியே!
"எங்கப்பன் அமைச்சரோட எடுபிடின்னு
எப்படி சொல்லன்னு" கேட்டுபுட்டு
வெட்கப்படாம நிக்குறியே...
சிங்கம்போல வந்தவுக
செதஞ்சுபோயி நிக்காவுக
செதஞ்சுபோயி நின்னாலும்
காலேசுக்கு உன்ன கொண்டுவிட
சைக்கிள் எடுக்க போறாவுக...
வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்?
5 comments:
Kochai nadayilum..
alagaga vadithirukirai
thagapanthanin paasathinai..
By,
Pandian.
Its really heart breaking one....
nice choose of words...
sorry that i couldnt make my words in OUR dignified TAMIL language...
^ _ ^
//Kochai nadayilum..//
கிராமத்து நடைதான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்...
இது புதுசா இருக்கே பாண்டியன்!
nice...
superb appa magal paasam
Post a Comment