நேற்று திடீரென்று நண்பர் butterfly சூர்யா விடமிருந்து தொலைபேசி அழைப்பு.. காலையில் பெரும்பாலும் அழைக்க மாட்டார். ஒரு முக்கியமான செய்தி என்றார். அப்போது வெளியில் இருந்ததால் வாகன இரைச்சலில் சரியாக கேட்கவில்லை மீண்டும் அழைப்பதாக சொல்லி போனை வைத்து விட்டர்.. கொஞ்சம் டென்ஷனாகி போனேன்.
மீண்டும் மதியம் அழைத்து இலங்கை ஷக்தி பண்பலைக்காக ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றார். அவர்களே மாலை அழைத்து ஒலிப்பதிவு செய்வார்கள் என்றும் சொன்னார்.
மாலை அழைத்து ஒலிப்பதிவும் செய்தார்கள்.. மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி பற்றிய தகவல்:
வானொலி : "சக்தி" பண்பலை
அலைவரிசை : கொழும்பு & கிழக்கு: 105.1 கண்டி: 91.50
கிழமை : ஞாயிறு
நாள் : 29/11/2009
நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை..
நிகழ்ச்சியின் பெயர்: அன்னைக்காக
”அம்மா என்றொரு தேவதை” என்ற பெயரில் ஒரு கவிதை வாசித்து இருக்கிறேன்.
ஆனால் என் குரலை நானே இங்கு (இந்தியாவில்) கேட்க இயலாது என்று நினைக்கிறேன். இலங்கை நண்பர்கள் கேட்டுவிட்டு கருத்தை கூறுங்கள்.
ஒலி நாடா வந்ததும் பதிவில் சேர்க்கிறேன்.
என் பெயரை பரிந்துரைத்த நண்பர் சூர்யாவிற்கும் வாய்ப்பளித்த ஷக்தி பண்பலைக்கும் மிக்க நன்றி.
டிஸ்கி: இந்த ஒலிப்பதிவில் கவிஞர். வைரமுத்து, கவிஞர். பா.விஜய் அவர்களின் கவிதையுடன் என் கவிதையும் இடம் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.
12 comments:
வாழ்த்துக்கள் நிலாரசிகன்..............
wow.........
congratz..:)
GREAT. வாழ்த்துகள் நிலா.
வாழ்த்துக்கள் நிலா
வாழ்த்துக்கள் நிலா
வாழ்த்துகள் ரசிகன்.!
migavum magizhchi...
Congrats
வாழ்த்துக்கள் நிலாரசிகன்
வாழ்த்துக்கள் நிலாரசிகன்
neenga vaasiththa kavithaiyai naangalum vaasikka..,
ungal valaith thalaththil post seiyalaame!
congrats Nila
Post a Comment