Monday, November 16, 2009

கூடல்திணை - இணைய இதழ்




துவங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இயங்கிக் கொண்டிருக்கும் யுகமாயினி குழுவிலிருந்து புதிய வரவாக கூடல்திணை இணைய இதழ் வெளிவர உள்ளது. இதன் சிறப்பு அம்சங்களாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது என்னவென்றால்

1.
வலையுலகிற்கு வெளியே கணினி பரிச்சயமற்ற ஏராளமான படைப்பாளிகள் மத்தியிலிருந்து
தேர்வு செய்த படைப்புகளை கூடல் திணை மூலம் வலையுலகில் பதிவு செய்வது,இதன் காரணமாக இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் வகையில் மூத்த படைப்பாளிகளது பங்களிப்பு அமையும்.உதாரணமாக முப்பது வருடங்களுக்கு முன்பாக தமிழ் கவிதையுலகை புரட்டி போட்ட ”சனங்களின் கதை” கவிதை தொகுப்பினைப் படைத்த பேராசிரியர் பழமலய்,ஈழத்து மூத்த படைப்பாளி எஸ்பொ,எழுபதுகளிலேயே நவீன எழுத்தை தொட்டு படைப்புலகில் சலனத்தை உண்டாக்கிய இந்திரா பார்த்தசாரதி,தமிழின் முதல் சிற்றிதழான “எழுத்து” துவக்கம் இன்றைய யுகமாயினி வரை,சிற்றிதழ் சேகரிப்போடு சிறந்த விமர்சகராகவும் விளங்கும் வே.சபாநாயகம்,அறிவியற் புனைக்கதையில் விருதுபெற்ற ஏராளமான ஆர்த்தர் சி.க்ளார்க் படைப்புகளை மொழிபெயர்த்த உலோ.செந்தமிழ்க்கோதை இன்னும் பலர் இடம்பெறுவர்.மட்டுமல்லாது இணைய இதழ்களில் தனது எழுத்தால் கவர்ந்த இரா.முருகன் தன்னுடைய மூன்றாவது விரல் புதினத்தின் இரண்டாது பாகத்தை இதில் துவங்குகிறார்.இரா.முருகனை போன்றே இணையயுலகில் பரிச்சயமான ஏராளமானோர் இதில் இடம் பெறுவர்.

2.
யுகமாயினின் கட்டமைப்பை போன்றே கூடல் திணையிலும் மூத்த படைப்பாளிகளுடன் இன்றைய இளம் படைப்பாளிகளும் இடம்பெறுவதோடு அவர்களில் குறிப்பிட்ட சிலர் தேர்வுசெய்யப்பட்டு அச்சு இதழ் யுகமாயினியில் இடம்பெறுவர்.

3.
ஒருங்குறித் தமிழ் எழுத்துருக்களில் இதுவரை எந்த இணைய இதழிலும் பயன்படுத்தாத pdsoftware.in& higopi.com வடிவமைத்துள்ள அலங்கார சிறப்பு ஒருங்குறி எழுத்துருக்களை கூடல்திணை பயன்படுத்தி இருக்கிறது.

4.
இணைய இதழ்களின் வரலாற்றில் கூடல்திணை அடுத்த இலக்கை நோக்கி பயன்படுகிறதென்று இதழ் ஆசிரியர் சித்தன் தெரிவித்தார்.அவருடன் செயலாற்ற அணிற்பிள்ளையாக நானும் இணைந்துள்ளேன்.

தற்போது சோதனை ஓட்டமாக டிசம்பர் 31,2009 வரை செயல்படும் கூடல்திணையின் தற்காலிக முகவரி:

http://viruba.com/chiththan/index.aspx

7 comments:

said...

பகிர்வுக்கு நன்றி

said...

m...appadiyaa!

vazhththukal..

said...

சேரலின் மூலமாக இங்கு வந்தேன். தகவலுக்கு நன்றி நிலா...சிறக்க வாழ்த்துக்கள்.

said...

இதழ் பார்த்தேன், ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துகள் நிலா, ஆசிரியர் குழுவுக்கும் வாழ்த்துகள்

said...

பகிர்வுக்கு நன்றி+ வாழ்த்துக்கள்!!!

deva

said...

பகிர்வுக்கு நன்றி+ வாழ்த்துக்கள்!!!

said...

வாழ்த்துகள்