என்ன குற்றம் செய்தன
அந்த அறுபத்தி ஒன்று
பச்சிளம் குழந்தைகள்?
தாய்மொழி தமிழென்பது
குற்றமா?
இலங்கையில் பிறந்தது
குற்றமா?
பெற்றவர்களை இழந்தது
குற்றமா?
செஞ்சோலையில் வசித்தது
குற்றமா?
தாலாட்ட அன்னையில்லை
அறிவூட்ட தந்தையில்லை
சொந்தம் என்று எவரும்
இல்லை....
அதனால் கொன்று போட்டாலும்
கேட்பார் யாருமில்லை என்று
இந்த தண்டனையா?
அடே பிரம்மனே..
படைப்பின் இறைவனே
நெஞ்சில் ஈரமில்லாத,
உடலில் முதுகெலும்பில்லாத,
மனிதர்களை ஏனடா
படைத்தாய்?
அடே எமதர்மா!
எங்கள் பிள்ளைச்செடிகளை
வேரோடு சாய்த்த
மனிதக்கோடரிகள் மீது
எப்போது
உன் பாசக்கயிற்றை
வீசப்போகிறாய்?
இறைவா...
பூவியில் நரகத்தை
மட்டுமே கொடுத்த
எங்கள் செஞ்சோலை பிஞ்சுகளுக்கு
விண்ணிலாவது
சொர்க்கத்தைக் கொடு.
இனவெறி கொண்டவனே!
உனக்கு மட்டும்
இதயம் என்ன
கல்லாகவா இருக்கிறது?
உன் போன்றவர்களால்....
மனித இனத்தில்
பிறந்ததற்காக
முதல் முறையாக
வெட்கப்படுகிறேன்.
வேதனையுடன்,
நிலாரசிகன்.
Wednesday, August 16, 2006
Tuesday, August 15, 2006
சுதந்திரம்....
இரு நூறு
வருடம் ஆட்சி
செய்தவனிடமிருந்து
பெற்றுத் தர
முடிந்தது ஒரு
கிழவனால்...
ஐம்பத்தொன்பது
வருடம் ஆட்சி
செய்பவனிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...
-----------------------------------------------
இந்தியாவிற்கு
1947ல்...
தூயத் தமிழ்
பேசும்
தமிழர்களுக்கு?
------------------------------------------------
வருடம் ஆட்சி
செய்தவனிடமிருந்து
பெற்றுத் தர
முடிந்தது ஒரு
கிழவனால்...
ஐம்பத்தொன்பது
வருடம் ஆட்சி
செய்பவனிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...
-----------------------------------------------
இந்தியாவிற்கு
1947ல்...
தூயத் தமிழ்
பேசும்
தமிழர்களுக்கு?
------------------------------------------------
Labels:
கவிதைகள்
Monday, August 14, 2006
தேவதைத் தோட்டம்...
அன்பானவர்களே..
எனது கவிதைகளை நிலாச்சாரல்
இணைய தளம் E-bookக்காக வெளியிட்டுள்ளது.
தேவதைத் தோட்டம் என்கிற பெயரில்...
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=448
இங்கு சென்று 1.99$ செலுத்தி பெற்றுக் கொள்ள விரும்பும்
அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நட்புடன்,
நிலாரசிகன்.
எனது கவிதைகளை நிலாச்சாரல்
இணைய தளம் E-bookக்காக வெளியிட்டுள்ளது.
தேவதைத் தோட்டம் என்கிற பெயரில்...
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=448
இங்கு சென்று 1.99$ செலுத்தி பெற்றுக் கொள்ள விரும்பும்
அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நட்புடன்,
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Saturday, August 12, 2006
ரிங்கா ரிங்கா ரோசஸ்...

இடது கையில்
ஒரு தோழனையும்
வலது கையில்
ஒரு தோழியையும்
பிடித்துக் கொண்டு
வட்டமடித்து வேகமாய்
சுற்றிவந்து விளையாடி
மகிழ்ந்த நாட்களையெல்லாம்
நினைத்து பார்க்ககூட விடாமல்
செய்கிறது இந்த அவசர
வாழ்க்கை.
Labels:
கவிதைகள்
Thursday, August 10, 2006
எங்க ஊரு பொழப்பு....
ஏலே முத்துப்பாண்டி!
ஊருக்குள்ள பணக்கார
பெருசு ஒண்ணு உசிர
விட்டுருச்சாம்
நம்ம பயலுகள
கூட்டியாடா!
கறிச்சோறு போடுவாக
காப்பித்தண்ணி ஊத்துவாக
பாடையில போகையில சில்லரை
அள்ளி எறிவாக...
சீக்கிரம் கூட்டியாடா...
இழவு வீட்டுலயாவது
நம்ம அரை வயிறு
முழுசா நிறையட்டும்...
கஞ்சி குடிக்க இழவு
வீடு தேடுற நம்ம
பொழப்பு நம்மோட
போகட்டும்...
ஊருக்குள்ள பணக்கார
பெருசு ஒண்ணு உசிர
விட்டுருச்சாம்
நம்ம பயலுகள
கூட்டியாடா!
கறிச்சோறு போடுவாக
காப்பித்தண்ணி ஊத்துவாக
பாடையில போகையில சில்லரை
அள்ளி எறிவாக...
சீக்கிரம் கூட்டியாடா...
இழவு வீட்டுலயாவது
நம்ம அரை வயிறு
முழுசா நிறையட்டும்...
கஞ்சி குடிக்க இழவு
வீடு தேடுற நம்ம
பொழப்பு நம்மோட
போகட்டும்...
Labels:
கவிதைகள்
Saturday, July 29, 2006
"குங்குமம்" வார இதழில் என் கவிதை!
கவிதை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு...
ஒரு நற்செய்தி...
நிலாச்சாரலில் வெளியான என் கவிதையொன்று 30,7.2006 தேதியிட்ட "குங்குமம்"வார இதழில் வெளியாகி உள்ளது. (பக்கம் 89) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கவிப்பயணத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..
ஒரு நற்செய்தி...
நிலாச்சாரலில் வெளியான என் கவிதையொன்று 30,7.2006 தேதியிட்ட "குங்குமம்"வார இதழில் வெளியாகி உள்ளது. (பக்கம் 89) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கவிப்பயணத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..
Labels:
கவிதைகள்
Saturday, July 15, 2006
அது ஒரு காலம்...
தோட்டகார பய
ஒருத்தன்கல்லால அடிக்க,
ஒத்தக்காலு ஊனமான
ஆட்டுக்குட்டிய தோளுல சொமந்து
ஆட்டம் போட்டகாலம்
நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
மீனு புடிக்க ஆத்துக்கு
போயி கெண்ட மீனபுடிச்சுப்புட்டு,
பாவப்பட்டு ஆத்தோட அனுப்பிவச்சு
துள்ளியோடி வீடு வந்தகாலம்
நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
பள்ளிக்கூடம் விட்டு
திரும்பையில தெருவோரம்
தனியா தவிச்ச நாய்க்குட்டிய
தூக்கி வந்து "ஹார்லிக்ஸ்"
குடுத்து ஒண்ணா வௌயாடுன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
தக்காளி செடி ஒண்ணுகொண்டு
வந்து நாமவளர்க்க,இல விட்டசெடிமேல
ஒரு நாளு அடைமழை பெய்ய
குடகொண்டு செடிக்கு காவலா நின்ன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
அஞ்சறிவு விலங்குக்கும்,
அஃறினை செடிக்கும்,
காட்டின அன்பெல்லாம்
காலத்தோட மறந்து போச்சுதே..
அப்பனாத்தாவ அனாதயா
முதியோர் இல்லத்துல விட்டு வரும்போது
ஆறறிவுல ஒண்ணுகொறஞ்சு
போனதா நினவுசொல்லுதே
நண்பனே!
ஒருத்தன்கல்லால அடிக்க,
ஒத்தக்காலு ஊனமான
ஆட்டுக்குட்டிய தோளுல சொமந்து
ஆட்டம் போட்டகாலம்
நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
மீனு புடிக்க ஆத்துக்கு
போயி கெண்ட மீனபுடிச்சுப்புட்டு,
பாவப்பட்டு ஆத்தோட அனுப்பிவச்சு
துள்ளியோடி வீடு வந்தகாலம்
நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
பள்ளிக்கூடம் விட்டு
திரும்பையில தெருவோரம்
தனியா தவிச்ச நாய்க்குட்டிய
தூக்கி வந்து "ஹார்லிக்ஸ்"
குடுத்து ஒண்ணா வௌயாடுன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
தக்காளி செடி ஒண்ணுகொண்டு
வந்து நாமவளர்க்க,இல விட்டசெடிமேல
ஒரு நாளு அடைமழை பெய்ய
குடகொண்டு செடிக்கு காவலா நின்ன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
அஞ்சறிவு விலங்குக்கும்,
அஃறினை செடிக்கும்,
காட்டின அன்பெல்லாம்
காலத்தோட மறந்து போச்சுதே..
அப்பனாத்தாவ அனாதயா
முதியோர் இல்லத்துல விட்டு வரும்போது
ஆறறிவுல ஒண்ணுகொறஞ்சு
போனதா நினவுசொல்லுதே
நண்பனே!
Labels:
கவிதைகள்
Thursday, July 13, 2006
டியர் தீவிரவாதி அங்கிள்...
மும்பையில் 11-07-2006 அன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பல அப்பாவி உயிர்களின் இரத்தம் குடித்து சிரித்தது தீவிரவாதம்.
தீவிரவாதிஎன்கிற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்ற கோழைகளின் செயல்களைக் காணும்போது ...நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்என்கிற அளவிற்கு வன்மம் தலைதூக்குகிறது...
என் உள்ளக் குமறல்களை கவிதையாக எழுதி என்ன பயன்?
மாட்டுச் சந்தையில் மயில் இறகிற்கு என்ன வேலை?
மனம் கனக்கிறது...
தீவிரவாதி ஒருவனுக்கு அவனதுசெயலை கண்டித்து எழுதுவதை விட பாசத்துடன் எழுதினாலாவது திருந்துவான் என்கிற ஒரு சிறு நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்...
டியர் தீவிரவாதி அங்கிள்..
என் பெயர் சத்யா.. 5த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்...
அங்கிள் நேத்து இராத்திரியில இருந்து எங்க அப்பா
வீட்டுக்கே வரலை...அம்மா அழறா. அக்கா அழறா..
பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா.
எதுக்கு அழறம்மான்னு கேட்டேன்.... அப்பா வீட்டுக்கு
வரும் போது ட்ரெயின்ல குண்டு வெடிச்சதுல செத்து போயிட்டாராம்..
யாரும்மா குண்டு வச்சதுன்னு கேட்டேன்... "தீவிரவாதி"ன்னு மட்டும்
அம்மா சொல்றா.
தீவிரவாதி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க.... ஏன் அங்கிள் குண்டு வச்சீங்க?
எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...
நாளைக்கு என்னையும் அக்காவையும் பீச்க்கு கடல்ல விளையாட
கூட்டிட்டு போறேன்னு சொன்னார்....
எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...
அங்கிள் நீங்க ஸ்கூல்ல படிச்சதே இல்லையா?
"உயிர்களை கொல்வது பாவம்"ன்னு எங்க டீச்சர் சொல்லி தந்திருக்காங்க அங்கிள்..
உங்களுக்கு யாருமே சொல்லித் தரலையா அங்கிள்?
உங்களுக்கு இதயமே கிடையாதா அங்கிள்?
எங்க அம்மா அழறத பார்க்க பாவமா இருக்கு அங்கிள்...எங்க அப்பா திரும்பி
வரவே மாட்டாரா அங்கிள்?
ஏன் இப்படி செஞ்சீங்க?
போன வாரம் நான் ஒரு நாய்குட்டிய கல்லால அடிச்சதுக்கு எங்க
அம்மா என்னை திட்டினாங்க அங்கிள்...
நீங்க வெடிச்ச வெடிகுண்டால நிறைய பேர் செத்துட்டாங்களாம்...
உங்க அம்மா உங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டாங்களா அங்கிள்?
நான் இரண்டு நாளா தூங்கவே இல்ல அங்கிள்...
எங்க அப்பா என் கைய புடிச்சுக்கிட்டே சிங்கம், புலி கதை நிறைய
சொல்வாரு...கதை கேட்டாதான் நான் தூங்குவேன்..
இனி யாரு எனக்கு கதை சொல்வா?
அழுகை அழுகையா வருது அங்கிள்...
எனக்காக இனிமே உயிர்களை கொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க
அங்கிள்....ப்ளீஸ்...
பாசமுடன்,
சத்யா.
கவலையுடன்,
நிலாரசிகன்.
தீவிரவாதிஎன்கிற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்ற கோழைகளின் செயல்களைக் காணும்போது ...நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்என்கிற அளவிற்கு வன்மம் தலைதூக்குகிறது...
என் உள்ளக் குமறல்களை கவிதையாக எழுதி என்ன பயன்?
மாட்டுச் சந்தையில் மயில் இறகிற்கு என்ன வேலை?
மனம் கனக்கிறது...
தீவிரவாதி ஒருவனுக்கு அவனதுசெயலை கண்டித்து எழுதுவதை விட பாசத்துடன் எழுதினாலாவது திருந்துவான் என்கிற ஒரு சிறு நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்...
டியர் தீவிரவாதி அங்கிள்..
என் பெயர் சத்யா.. 5த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்...
அங்கிள் நேத்து இராத்திரியில இருந்து எங்க அப்பா
வீட்டுக்கே வரலை...அம்மா அழறா. அக்கா அழறா..
பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா.
எதுக்கு அழறம்மான்னு கேட்டேன்.... அப்பா வீட்டுக்கு
வரும் போது ட்ரெயின்ல குண்டு வெடிச்சதுல செத்து போயிட்டாராம்..
யாரும்மா குண்டு வச்சதுன்னு கேட்டேன்... "தீவிரவாதி"ன்னு மட்டும்
அம்மா சொல்றா.
தீவிரவாதி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க.... ஏன் அங்கிள் குண்டு வச்சீங்க?
எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...
நாளைக்கு என்னையும் அக்காவையும் பீச்க்கு கடல்ல விளையாட
கூட்டிட்டு போறேன்னு சொன்னார்....
எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...
அங்கிள் நீங்க ஸ்கூல்ல படிச்சதே இல்லையா?
"உயிர்களை கொல்வது பாவம்"ன்னு எங்க டீச்சர் சொல்லி தந்திருக்காங்க அங்கிள்..
உங்களுக்கு யாருமே சொல்லித் தரலையா அங்கிள்?
உங்களுக்கு இதயமே கிடையாதா அங்கிள்?
எங்க அம்மா அழறத பார்க்க பாவமா இருக்கு அங்கிள்...எங்க அப்பா திரும்பி
வரவே மாட்டாரா அங்கிள்?
ஏன் இப்படி செஞ்சீங்க?
போன வாரம் நான் ஒரு நாய்குட்டிய கல்லால அடிச்சதுக்கு எங்க
அம்மா என்னை திட்டினாங்க அங்கிள்...
நீங்க வெடிச்ச வெடிகுண்டால நிறைய பேர் செத்துட்டாங்களாம்...
உங்க அம்மா உங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டாங்களா அங்கிள்?
நான் இரண்டு நாளா தூங்கவே இல்ல அங்கிள்...
எங்க அப்பா என் கைய புடிச்சுக்கிட்டே சிங்கம், புலி கதை நிறைய
சொல்வாரு...கதை கேட்டாதான் நான் தூங்குவேன்..
இனி யாரு எனக்கு கதை சொல்வா?
அழுகை அழுகையா வருது அங்கிள்...
எனக்காக இனிமே உயிர்களை கொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க
அங்கிள்....ப்ளீஸ்...
பாசமுடன்,
சத்யா.
கவலையுடன்,
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Saturday, May 06, 2006
அவரவர் வாழ்க்கை...
ரயிலின் வருகையைப் பற்றி
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .
நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.
இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.
அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .
நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.
இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.
அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.
Labels:
கவிதைகள்
Friday, March 10, 2006
காகிதப் பூக்கள்..
என் இனிய தோழனே..
நலமா ? வெகு நாட்கள் கழித்து இன்று உனக்கொரு நீண்ட மடல் எழுதுகிறேன் .
எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், நான் வளர்க்கும் நாய்க்குட்டி உட்பட. ஜன்னலோரம் அமர்ந்து தோழன் உனக்கு கடிதம் எழுதுகின்ற தருணங்கள் மட்டுமே என் இதயம் சிலிர்க்கின்ற அதிஅற்புத தருணங்கள்.
என் அறை முதல் மாடியில் இருப்பது இன்னும் வசதி, என் தெரு முழுவதும் நன்றாக தெரியும் ...
இந்த பின்னிரவில் யாருமற்ற தெருவின் அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழனே ..
பகலெல்லாம் மிதிபடுகின்ற தெருவிற்கு இரவில் வானம் பனித்துளிகளால் ஒத்தடம் கொடுப்பதை பார்க்க இரு கண்கள் போதாது நண்பனே!
அதோ தூரத்தில் ஒரே ஒரு தெரு விளக்கு ...பகலெல்லாம் கண்மூடி, இரவெல்லாம் விழித்திருக்கும் இறும்புக்காவலன் அல்லவா இந்த விளக்கு!
காவல் மனிதர்களுக்கா இல்லை தெருவிற்கா?
எனக்கொரு சந்தேகம்...
இரவானால் இந் த விளக்கை சிறு சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டே
இருக்கும் .... அப்படி என்னதான் பேசுவார்கள் இந்த வெளிச்சக்காதலனிடம்
இந்த காதல்பூச்சிகள்?
சரி இப்படியே போனால் உன்னிடம் சொல்ல வந்ததையே நான் மறந்துவிடுவேன்..
இன்று என்ன நாள் என்று உனக்கு நினைவிருக்கிறதா தோழா ?
இன்று என் திருமண நாள். பார்! எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஓடோடி விட்டது!
திருமணத்திற்கு முன்பு பட்டுப்பாவாடையும் ,ரெட்டை ஜடையும் , கைகளில் புத்தகத்தையும் நெஞ்சில் கனவுகளையும் சுமந்து திரிந்த என் கிராமத்து கல்லூரி நாட்கள் நினைத்தால் எவ்வளவு சுகமான சுமையாய் இருக்கிறது தெரியுமா?
ஒரு பெண் தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு காண்கிற அழகான நாட்கள் அவை.
தோழிகளுடன் அரட்டையும், ஓரக்கண்ணில் ஓராயிரம் ஆண்களை அடிமையாக்கி திமிராய் நடந்த நாட்கள் அல்லவா அவை !
எவ்வளவு கனவுகள்....எவ்வளவு ஆசைகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்ற நண்பர்கள் ... என்று அந்த இளமைக்கால வாழ்க்கை திரும்பி கிடைக்குமா ?
என் கழுத்தில் தாலி கட்டிய அன்றே என் கனவுகளுக்கும் அல்லவா வேலி கட்டப்பட்டது!
சின்ன சின்ன விசயங்களையும் பகிர வேண்டும் என் துணைவன் என்கிற என் சிறிய ஆசையிலும்
முட்கள் விழுந்தது ஏன் தோழா ?
முதலிரவில் என் உள்ளங்கை பற்றி என் விருப்பங்கள், கனவுகள், ஆசைகள், வெறுப்புகள் என்று ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டு நட்சத்திரங்களாய் கண்கள் சிமிட்டுவான் என்று நினைத்து , ஏமாந்து கறுப்புவானமாய் இரவில் கரைந்தது என் தவறா நண்பனே?
ஒரு நாள் அலுவலகம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்தேன். பேருந்து கிடைக்காத காரணத்தால் தாமதமாக நான் வீடு வந்த பொழுது மதம்பிடித்து அவன் கேட்ட கேள்விகள்....
அன்றுதான் முதன்முதலில் உணர்ந்தேன்...உலகில் பேய்களும் உண்டு என்று ..
சந்தேகக் கண்களோடு அலைகின்ற புருஷப்பேய்கள்!...
"பெண்ணாய் பிறத்தல் புண்ணியம். பெண் நினனத்தால் எதுவும் செய்ய முடியும் . பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்"
இப்படியெல்லாம் பள்ளியில் பேச்சுப்போட்டியில் பேசியவள்தான் நான். இன்று பேச வார்த்தைகளற்று மெளனத்திற்கே மெளனமொழி கற்றுத் தருகிறேன் நண்பா...
என் கணவன் குடிப்பவனில்லை. மனதில் அடிப்பவன்.
என் கணவன் பெண்பித்தனில்லை .
வார்த்தைக்கத்தியால் இந்த சின்னப்புறாவை தினம் தினம் சமைப்பவன்.
சந்தேக அம்புகளால் என் தேகத்தை துளைப்பவன் .
தோழா ஒன்று தெரியுமா நான் இறந்தால் எனக்கு கண்டிப்பாய் சொர்க்கம்தான். இந்த மண்ணுலகில் நரகத்தில் வாழ்கிறேனே! இல்லை இல்லை நரகத்தோடு வாழ்கிறேனே...
சரி என் சோகம் முழுவதும் சொன்னால் நீ கண்ணீரில் கரைந்துவிடுவாய்..
நேற்று ஒரு கவிதை எழுதினேன்...
தனியாய் இருந்தேன்
துணையாய்
தனிமை"
எப்படி இருக்கிறது நண்பா?
ஒரு நல்ல செய்தி சொல்ல மறந்து விட்டேனே !
அந்த புருஷப்பேய்க்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது ! அதுவும் எப்படி ? எங்களுக்கு குழந்தை இல்லை என்பதால்
அந்த வேதாளம் வேறொரு பெண்மரம் தேடி போய்விட்டது. போனமாதம்தான் நாங்கள் நிரந்தரமாக பிரிந்தோம் நண்பா ..
சரி இனியாவது வாழ்க்கையின் அழகை ரசிக்கலாம் என்று நினைத்தேன்....
ஆனால் இந்த முட்டாள் சமுதாயம் எனக்கு எத்தனை பெயர் தருகிறது பார் தோழனே !
1. என் வீட்டில் என் பெயர் வாழாவெட்டி(ஆனாலும் என் சம்பளம் இனி
முழுவதுமாக கொடுக்க வேண்டுமாம் !!)
2. தெருவோர டீக்கடை ரோமியோக்கள் வைத்திருக்கும் பெயர் தனிக்கட்டை!( கட்டைல போயிருவீங்கடான்னு திட்ட நினைத்தேன். வார்த்தைகளை செலவிட விரும்பாமல் திரும்பிவிட்டேன்)
3.குழாயடிப் பெண்களிடம் என் பெயர் " பொழைக்க தெரியாதவ " (அதனால்தான் நான் சம்பாதிக்கிறேன் .. இதுகள் மெகா சீரியலில் மூழ்கி கிடக்கறதுகள்!)
ம்ம் .....இப்படி நிறைய...என் அலுவலகத்தில் ஒரு பெயர் ...தோழிகளிடத்தில் ஒரு பெயர் ....
சரி அதுகிடக்கட்டும் .... இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன் ஒரு ரோஜா செடி வளர்க்கிறேன் .. என் அறை ஜன்னலோரம் அந்த ரோஜா தொட்டி இருக்கிறது ...
அது நேற்று ஒரு சின்ன மொட்டு விட்டிருந்தது...
எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா ? அப்படியே அள்ளிக்கலாம்
போல இருந்துச்சு டா..
ஆனா இன்னைக்கு காலைல பூவா மாறாம அப்படியே உதிர்ந்து போச்சுது....
சே... அந்த மொட்டுக்கு எவ்ளோ ஆசையா இருந்திருக்கும் இந்த உலகத்தை பார்க்க.... பாவம் அது கொடுத்து வச்சது அவ்வளவுதான் ..
சரி ரொம்ப நேரமாச்சு அடுத்த மடல்ல நாம நிறைய பேசுவோம் சரியா?
நீ ஒழுங்கா சாப்பிடுடா....
என்றும் உன் தோள்தேடும்
உன் ப்ரிய தோழி .
கடிதம் எழுதி முடித்தாள் அவள்.
எழுதிய கடிதத்தை மறுநாள் அருகிலிருக்கும் கோவிலில் சென்று வைத்து விட்டு திரும்பினாள்
அவள். அவள் எழுதிய கடிதம் கடவுளுக்கு ....
ஆம் ...அவளுக்கு தோழன் என்றால் அது
கடவுள் மட்டுமே !
இவள் போல் மனசிற்குள் ஆயிரம் ஆசைப்பூக்களிருந்தும் இந்த சமுதாயத்தில் காகித பூக்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள் எத்தனை எத்தனையோ….
இது ஒரு பெண்ணை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டாலும்
இந்தக் கடிதத்தில் வருகின்ற "சந்தேக கணவன்" (கள்) இலட்சத்தில் ஒருவராவது இதைப் படித்து
திருந்தினால்
காகிதப்பூக்களும் இனி மணம் வீசும்!
நம்பிக்கையுடன ,
நிலாரசிகன்
Labels:
கவிதைகள்
Monday, December 26, 2005
சுனாமி கவிதை...
(சுனாமி பேரலையில் தன் பேரனை பலி கொடுக்கிறாள் ஏழை
மூதாட்டி ஒருவள்...
அவனை இழந்து ஒரு வருடம் கழித்து அவனது கல்லறையில்
அவள் உதிர்க்கும் கண்ணீர்த்துளிகளை கவிதையாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.)
பிரசவத்தோடு ஆத்தா போக
கட்டினவ நினப்போடு அப்பன் போக
அறுவது வயசுல எங்கையில்
வந்து விழுந்த மரிக்கொழுந்தே!
மகன் வயித்து பேரன்
உன்ன
மகனப்போல வளர்த்து
வந்தேன்.
கடலக் காமிச்சு
அம்மா இவ கும்பிட்டுக்கன்னு
சொல்லி வந்தேன்.
நர விழுந்த கிழடு
கட்டைகள விழுங்காம
கரயோடு வெளயாண்ட
புள்ள உன்ன
நுரகொண்டு
போயிடுச்சே!
தரயில மீனப்போட்டா
செத்துப்போகுமேன்னு
நா(ன்) யாவாரத்துக்கு
புடிச்சி வந்த மீன
கடல்ல கொண்டு போடுவியே
எந்தங்க மகராசா
இப்ப எந்த மீனு
வயித்துக்குள்ள இருக்கியோ
தெரியலயே!
கடலம்மா..
அரசாங்கம் தந்த காசெல்லாம்
கடல்ல தூக்கி போடுறேனம்மா..
காச எடுத்துக்கிட்டு
எம் பேரன கொடுத்திடம்மா!
நீ வளர்க்கும் மீனெல்லாம்
நா(ன்) புடிச்சிப் போறேன்னு
நா வளர்த்த எம் பேரன
பிடிச்சுப் போயிட்டியா தாயே!
அலையோடு போன
பேரப் புள்ளய நாந்தேடி
திரிஞ்ச நாளுல,
அப்பனாத்தா இல்லாம
அழுத ஒரு ஒத்தப் பிள்ள
இப்போ என் கூரவீட்டு
தொட்டில்ல சத்தமில்லாம
உறங்கி கிடக்கு.
குலமே அழிஞ்ச பின்னால
இந்தக் கிழவி உசுர
அந்தப் பச்சப்புள்ள சிரிப்பு
இழுத்துப் பிடிச்சிருக்கு.
மண்ணுக்குள்ள பேரன
பொதச்சுட்டு,
நெஞ்சுக்குள்ள புதுப்புள்ளய
நினைச்சுக்கிட்டு
தள்ளாடி நான் போறேன்
வீடு நோக்கி.
கலங்கிய இதயத்துடன்,
நிலாரசிகன்.
மூதாட்டி ஒருவள்...
அவனை இழந்து ஒரு வருடம் கழித்து அவனது கல்லறையில்
அவள் உதிர்க்கும் கண்ணீர்த்துளிகளை கவிதையாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.)
பிரசவத்தோடு ஆத்தா போக
கட்டினவ நினப்போடு அப்பன் போக
அறுவது வயசுல எங்கையில்
வந்து விழுந்த மரிக்கொழுந்தே!
மகன் வயித்து பேரன்
உன்ன
மகனப்போல வளர்த்து
வந்தேன்.
கடலக் காமிச்சு
அம்மா இவ கும்பிட்டுக்கன்னு
சொல்லி வந்தேன்.
நர விழுந்த கிழடு
கட்டைகள விழுங்காம
கரயோடு வெளயாண்ட
புள்ள உன்ன
நுரகொண்டு
போயிடுச்சே!
தரயில மீனப்போட்டா
செத்துப்போகுமேன்னு
நா(ன்) யாவாரத்துக்கு
புடிச்சி வந்த மீன
கடல்ல கொண்டு போடுவியே
எந்தங்க மகராசா
இப்ப எந்த மீனு
வயித்துக்குள்ள இருக்கியோ
தெரியலயே!
கடலம்மா..
அரசாங்கம் தந்த காசெல்லாம்
கடல்ல தூக்கி போடுறேனம்மா..
காச எடுத்துக்கிட்டு
எம் பேரன கொடுத்திடம்மா!
நீ வளர்க்கும் மீனெல்லாம்
நா(ன்) புடிச்சிப் போறேன்னு
நா வளர்த்த எம் பேரன
பிடிச்சுப் போயிட்டியா தாயே!
அலையோடு போன
பேரப் புள்ளய நாந்தேடி
திரிஞ்ச நாளுல,
அப்பனாத்தா இல்லாம
அழுத ஒரு ஒத்தப் பிள்ள
இப்போ என் கூரவீட்டு
தொட்டில்ல சத்தமில்லாம
உறங்கி கிடக்கு.
குலமே அழிஞ்ச பின்னால
இந்தக் கிழவி உசுர
அந்தப் பச்சப்புள்ள சிரிப்பு
இழுத்துப் பிடிச்சிருக்கு.
மண்ணுக்குள்ள பேரன
பொதச்சுட்டு,
நெஞ்சுக்குள்ள புதுப்புள்ளய
நினைச்சுக்கிட்டு
தள்ளாடி நான் போறேன்
வீடு நோக்கி.
கலங்கிய இதயத்துடன்,
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Thursday, December 01, 2005
என் நினைவோடையில் நீந்துகின்ற மீன்கள்..
2. அண்ணன்.
என் உடன் பிறந்தவன். பிறப்பால் அண்ணன்.
கவிதையால் குரு.
என் பாதையெல்லாம் பூக்கள் மலர, முட்கள் மிதித்துச் சென்றவன்.
தான் விரும்பியதெல்லாம் தன் தம்பி எனக்கு
கிடைக்க வழிசெய்தவன்.
பாசமானவனே! உன்னைப் பற்றி எழுதுவதற்கு
காரணம் என் மீதான உன் பாசம் மட்டுமல்ல.
ஒரு கிராமத்துச் சிறுவன் எந்த ஒரு பந்தங்களின்
ஏணிகளும் இல்லாமல் சிகரம் தொட்ட கதை இந்த உலகிற்கு சொல்லவே உன்னைப் பற்றி அதிகம் எழுத விரும்புகிறேன்.
நம் கிராமத்தில் கணிப்பொறி படித்த முதல் மாணவன் நீ.
இளநிலை முடித்து சென்னையில் முதுகலை படிக்க
வந்த முதல் கிராமத்துப்பறவை நீ.
சென்னை என்றாலே புருவம் உயர்த்தும் நம்மூர் மக்களுக்கு அமெரிக்கா சென்று வந்து
வியப்பில் ஆழ்த்தியவன் நீ.
இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விட வில்லை.
இதற்குப்பின் உன் உழைப்பும்,அவமானங்களை மாற்றி
வெகுமானங்கள் வாங்கிய உன் தன்மானமும் உண்டு என்பதை சிறியவன் நான் சத்தமாகச் சொல்லுவேன்.
உனக்குத் தெரியாமலேயே நீ என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வந்தாய் என்று பட்டியலிடவா?
கோலிகுண்டு விளையாட அழைக்கும் தோழர்களுக்கு
சதுரங்கம் விளையாட கற்றுத் தந்து அவர்களின் சிந்தனைச்சிறகுகள் விரியச்செய்தாய்.
உன் மனதை சாந்தப்படுத்திய தியானத்தை உன்
தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வெட்டிப்பேச்சினால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மெளனத்தின் புனிதம் கற்று
அவர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாய்.
உன் முன்னேற்றம் கண்டு ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு தீப்பொறி கிளம்பியதை நானறிவேன்.
முயற்சித்தவன் தோற்றதில்லை என்பதை உன் மூலம்தான் நான் கற்றுக் கொண்டேன்.
எனக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவனும் நீயே!
கவிதை வாசத்தை காட்டித் தந்தவனும் நீயே!
நீ படித்துப் போட்ட "சிறுவர்மலர்" நான் வாசித்த முதல் பாடபுத்தகமில்லாத புத்தகம்.
அதன் பிறகு சிறுவர்மலர் வந்தால் என் வாசிப்புக்கு பின்பே உன்னை வந்தடையும்...
நாட்கள் நகர நகர சிறுவன் நான் வளர்ந்து
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொழுது
போகாமல் உன் அனுமதியின்றி உன் பெட்டியில் கிடந்த சில நாட்குறிப்புகளை படிக்க எடுக்கிறேன்.
அந்த நாள் இன்றும் என் நினைவில் பூத்து நிற்கிறது.
நம் வீட்டு மொட்டைமாடியில் கொய்யா மர நிழலில்
யாருக்கும் தெரியாமல் உன் நாட்குறிப்புகள் சிலவற்றை எடுத்து வந்து படிக்கத் துவங்குகிறேன்....
"அடுத்தவர் டைரியை அனுமதியின்றி படிப்பது மனச்சட்டப்படி குற்றம்" என்கிற உன் வாசகத்தையும்
மீறி அன்று உன் நாட்குறிப்புக்குள் என் விழிகளால் நடக்க ஆரம்பிக்கிறேன்.
அன்று என்னுள் ஏற்பட்ட மாற்றம்...
முதல் முதலில் காதலியின் உதடுகளால் "உன்னை நான் நேசிக்கிறேன்" என்று கேட்கையில் உடல் புல்லரித்துப் போகுமே அதை விட ஆயிரம் மடங்கு
ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தேன்.
அன்றுதான் உன் கவிதைகளை முதல்முதலில் படித்தேன்.
உனக்கு இவ்வளவு அற்புதமான தமிழாற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதும் அன்றுதான்.
அதுவரை எனக்கு அண்ணனாய் இருந்தவன் அன்றுதான் ஆசானாய் உயர்ந்தாய்!
எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது ,உனக்குத் தெரியாமலேயே நீ எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய மற்றொரு முகம்-- கவிதை!
அதன்பின்பு நீ சேமித்த வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் இன்றி நான் உண்டதில்லை,உறங்கியதில்லை...
இன்று என் பேனாவில் வழிகின்ற வார்த்தைகள் கவிதை நதியாய் மாறுவதற்கு நதிமூலமானவன் நீ.
உன்னிடம் கேட்க நினைத்த சில கேள்விகளை
இன்று கேட்கிறேன்...
ஆழ்கடலில் கிடக்கின்ற விலைமதிப்பில்லாத முத்துக்கள் மாதிரி வெளியில் தெரியாமல் கவிதை
நோட்டில் உன் கவிதைமலர்கள் ஓய்வெடுக்கும் காரணம் என்ன?
வாழ்க்கை உன் மீது சுமத்திய கடமைகளை நீ சுமந்து நடந்ததில் நசுங்கிப்போயினவோ உன்
கவிப்பூக்கள்?
உன் உணர்வுகளை இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிடும் என்கிற தவிப்பினால் நிறுத்திவிட்டாயோ கவிதையுடனான உன் பந்தத்தை?
இந்தக் கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க ஒரே ஒரு வகையில் முடியும் அண்ணா.
கவிதை நோட்டில் உறங்குகின்ற உன் கவிதைகளை
அச்சில் ஏற்றி உலகிற்கு நான் அறிமுகம் செய்து வைப்பேன்.
அதன்பின்...
இந்தச் சமூகம் பூக்கள் தூவினால் உன் மீது
தூவ செய்வேன். முட்கள் எறிந்தால் உன் கேடயமாக நான் மாறுவேன்.
எனக்கு நிழல் தருகின்ற மரமாய் நீ இருக்கிறாய்.
உனக்கு மழை தருகின்ற மேகமாய் நானிருப்பேன் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில்....
நன்றியுடன்+பாசமுடன்,
உன் தம்பி.
நிலாரசிகன்.
என் உடன் பிறந்தவன். பிறப்பால் அண்ணன்.
கவிதையால் குரு.
என் பாதையெல்லாம் பூக்கள் மலர, முட்கள் மிதித்துச் சென்றவன்.
தான் விரும்பியதெல்லாம் தன் தம்பி எனக்கு
கிடைக்க வழிசெய்தவன்.
பாசமானவனே! உன்னைப் பற்றி எழுதுவதற்கு
காரணம் என் மீதான உன் பாசம் மட்டுமல்ல.
ஒரு கிராமத்துச் சிறுவன் எந்த ஒரு பந்தங்களின்
ஏணிகளும் இல்லாமல் சிகரம் தொட்ட கதை இந்த உலகிற்கு சொல்லவே உன்னைப் பற்றி அதிகம் எழுத விரும்புகிறேன்.
நம் கிராமத்தில் கணிப்பொறி படித்த முதல் மாணவன் நீ.
இளநிலை முடித்து சென்னையில் முதுகலை படிக்க
வந்த முதல் கிராமத்துப்பறவை நீ.
சென்னை என்றாலே புருவம் உயர்த்தும் நம்மூர் மக்களுக்கு அமெரிக்கா சென்று வந்து
வியப்பில் ஆழ்த்தியவன் நீ.
இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விட வில்லை.
இதற்குப்பின் உன் உழைப்பும்,அவமானங்களை மாற்றி
வெகுமானங்கள் வாங்கிய உன் தன்மானமும் உண்டு என்பதை சிறியவன் நான் சத்தமாகச் சொல்லுவேன்.
உனக்குத் தெரியாமலேயே நீ என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வந்தாய் என்று பட்டியலிடவா?
கோலிகுண்டு விளையாட அழைக்கும் தோழர்களுக்கு
சதுரங்கம் விளையாட கற்றுத் தந்து அவர்களின் சிந்தனைச்சிறகுகள் விரியச்செய்தாய்.
உன் மனதை சாந்தப்படுத்திய தியானத்தை உன்
தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வெட்டிப்பேச்சினால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மெளனத்தின் புனிதம் கற்று
அவர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாய்.
உன் முன்னேற்றம் கண்டு ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு தீப்பொறி கிளம்பியதை நானறிவேன்.
முயற்சித்தவன் தோற்றதில்லை என்பதை உன் மூலம்தான் நான் கற்றுக் கொண்டேன்.
எனக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவனும் நீயே!
கவிதை வாசத்தை காட்டித் தந்தவனும் நீயே!
நீ படித்துப் போட்ட "சிறுவர்மலர்" நான் வாசித்த முதல் பாடபுத்தகமில்லாத புத்தகம்.
அதன் பிறகு சிறுவர்மலர் வந்தால் என் வாசிப்புக்கு பின்பே உன்னை வந்தடையும்...
நாட்கள் நகர நகர சிறுவன் நான் வளர்ந்து
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொழுது
போகாமல் உன் அனுமதியின்றி உன் பெட்டியில் கிடந்த சில நாட்குறிப்புகளை படிக்க எடுக்கிறேன்.
அந்த நாள் இன்றும் என் நினைவில் பூத்து நிற்கிறது.
நம் வீட்டு மொட்டைமாடியில் கொய்யா மர நிழலில்
யாருக்கும் தெரியாமல் உன் நாட்குறிப்புகள் சிலவற்றை எடுத்து வந்து படிக்கத் துவங்குகிறேன்....
"அடுத்தவர் டைரியை அனுமதியின்றி படிப்பது மனச்சட்டப்படி குற்றம்" என்கிற உன் வாசகத்தையும்
மீறி அன்று உன் நாட்குறிப்புக்குள் என் விழிகளால் நடக்க ஆரம்பிக்கிறேன்.
அன்று என்னுள் ஏற்பட்ட மாற்றம்...
முதல் முதலில் காதலியின் உதடுகளால் "உன்னை நான் நேசிக்கிறேன்" என்று கேட்கையில் உடல் புல்லரித்துப் போகுமே அதை விட ஆயிரம் மடங்கு
ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தேன்.
அன்றுதான் உன் கவிதைகளை முதல்முதலில் படித்தேன்.
உனக்கு இவ்வளவு அற்புதமான தமிழாற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதும் அன்றுதான்.
அதுவரை எனக்கு அண்ணனாய் இருந்தவன் அன்றுதான் ஆசானாய் உயர்ந்தாய்!
எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது ,உனக்குத் தெரியாமலேயே நீ எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய மற்றொரு முகம்-- கவிதை!
அதன்பின்பு நீ சேமித்த வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் இன்றி நான் உண்டதில்லை,உறங்கியதில்லை...
இன்று என் பேனாவில் வழிகின்ற வார்த்தைகள் கவிதை நதியாய் மாறுவதற்கு நதிமூலமானவன் நீ.
உன்னிடம் கேட்க நினைத்த சில கேள்விகளை
இன்று கேட்கிறேன்...
ஆழ்கடலில் கிடக்கின்ற விலைமதிப்பில்லாத முத்துக்கள் மாதிரி வெளியில் தெரியாமல் கவிதை
நோட்டில் உன் கவிதைமலர்கள் ஓய்வெடுக்கும் காரணம் என்ன?
வாழ்க்கை உன் மீது சுமத்திய கடமைகளை நீ சுமந்து நடந்ததில் நசுங்கிப்போயினவோ உன்
கவிப்பூக்கள்?
உன் உணர்வுகளை இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிடும் என்கிற தவிப்பினால் நிறுத்திவிட்டாயோ கவிதையுடனான உன் பந்தத்தை?
இந்தக் கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க ஒரே ஒரு வகையில் முடியும் அண்ணா.
கவிதை நோட்டில் உறங்குகின்ற உன் கவிதைகளை
அச்சில் ஏற்றி உலகிற்கு நான் அறிமுகம் செய்து வைப்பேன்.
அதன்பின்...
இந்தச் சமூகம் பூக்கள் தூவினால் உன் மீது
தூவ செய்வேன். முட்கள் எறிந்தால் உன் கேடயமாக நான் மாறுவேன்.
எனக்கு நிழல் தருகின்ற மரமாய் நீ இருக்கிறாய்.
உனக்கு மழை தருகின்ற மேகமாய் நானிருப்பேன் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில்....
நன்றியுடன்+பாசமுடன்,
உன் தம்பி.
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Monday, November 28, 2005
என் நினைவோடையில் நீந்துகின்ற மீன்கள்...
இது நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மறக்க முடியாத சில இதயங்களைப் பற்றிய பதிவுகள்..
1.தொபரா டீச்சர்:-
என் விரல் பிடித்து அ,ஆ எழுத சொல்லித் தந்த என் முதல் வகுப்பு
ஆசிரியை இவர்.
தோளில் புத்தகப்பையுடன்,எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து சீவிய தலையுடன்
பள்ளிச் சென்று வந்த பசுமையான காலம் அது.
பள்ளிச் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகள் பார்த்திருப்பீர்கள்.
பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தை கண்டதுண்டா?
நான் அடம்பிடித்திருக்கிறேன்...
எங்கள் கிராமத்தில் முதல் முதலில் துவக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளி அது.
அதில்தான் என்னைச் சேர்த்தார்கள்...
அது ஒரு பெரிய பங்களா. அதை பள்ளியாக மாற்றி இருந்தார்கள்.
(இன்று அதை மாற்றி ஒரு கணிப்பொறி மையம் வந்துவிட்டது...அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம் மனம் கனமாகி விழியோரம் வழிந்துவிடும்)
எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது.
எங்கள் வகுப்புக்கு பலர் ஆசிரியர்களாக வந்துச் சென்றனர்...ஆனால் இந்தச் சிறிய
இதயத்தின் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தொபரா டீச்சர் மட்டும்தான்.
அம்மா நியாபகம் வந்து அழுகின்ற குழந்தைகளை அன்போடு அணைத்து,கண்ணீர் துடைத்து நேசத்துடன் பாடம் நடத்துகின்ற ஒரு ஜீவன் சிறுவகுப்பு ஆசிரியர்கள்
மட்டும்தானே?
எத்தனையோ குழந்தைகள் பள்ளி என்று மறந்து "அம்மா" என்று அழைப்பதெல்லாம் அந்த அன்பான ஜீவன்களைப் பார்த்துதான்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்...
தெய்வமே செய்கின்ற தொழில்தானோ ஆசிரிப்பணி?
எங்கள் தொபரா டீச்சர் அன்பானவர்.
அவரைப் போலவே அவரது கையெழுத்தும் மிகவும் அழகாய் இருக்கும்.
மற்றவர்களை விட அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருந்ததாக பட்டதுஅந்த புரியாத வயதில்.
என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்தது.
டீச்சர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
எளிதில் கோபப்படாத நீங்கள் ஒருநாள் என்னைத் திட்டிவிட்டீர்கள்.
பனித்துளி விழுந்தால் பூக்கள் தாங்கிக்கொள்ளும். ஆனால் இந்தச் சின்னப்பூவின் மேல் பாறை அல்லவா விழுந்தது...
உடைந்து போன நான் வகுப்பு நடக்கும்போதே வீட்டிற்கு ஓடிவிடுகிறேன்.
எல்லோரிடமும் நீங்கள் என்னைத் திட்டியதைச் சொல்லி அழுகிறேன்.
அதன் பின் என் வீட்டினர் என்னை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றனர்...
அப்போது மதியவேளை....கொண்டுவந்த சாப்பாடு பாத்திரம் திறந்துவரிசையாய் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன்...
அங்கே நீங்கள் வந்தீர்கள்....
செதுக்குகின்ற சிற்பத்திற்கு வலிக்கும் என்று உளிக்கு தெரியாதா என்ன!
அன்றுதான் முதல் முதலில் உங்கள்கண்கள் கலங்கியதை கண்டேன்....(இந்த நிமிடமும்..இதை எழுதுகின்றஇந்த நொடியிலும் என் விழியோரம் நீர்த்துளிகள்...)
என்னை அன்போடு அணைத்துக்கொண்டீர்கள்...எனக்கு அந்த நேசத்தின்அணைப்பை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை டீச்சர்.
அதுநாள் வரை எனக்கு அறிவூட்டியவர்கள் அன்று எனக்குஉணவூட்டி உயிர்மலரச்செய்தீர்கள்.
நாட்கள் நதியாய் நகரத் தொடங்கியதில் நான் உயர்நிலைப்பள்ளிக்குமாறினேன்....
புது நண்பர்கள்...புது பள்ளி....என்று வந்த மாற்றத்தில் உங்களை நான்மறந்து போனேன்....
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்...
என் தோழன் ஒருவன் வந்து என் கையில் ஒரு திருமண பத்திரிக்கைதிணித்துச் சென்றான்...
பிரித்துப் பார்த்தேன்....உங்கள் திருமண அழைப்பிதழ் அது....
ஏறக்குறைய ஏழுவருடங்களாக என் நினைவில் இருந்தே மறைந்து விட்ட உங்கள் பெயரை அன்று அந்த பத்திரிக்கையில் பார்த்தேன்.
என்னை மறக்காமல் நீங்கள் பத்திரிக்கை அனுப்பி இருந்தது கண்டு சில நிமிடங்கள் என்னால் பேச முடியவில்லை டீச்சர்.
அன்று விழுந்த உங்கள் அன்பு நினைவுவிதை விருட்சமாக வளர்ந்து இன்னும் பூக்கள் சிந்திக்கொண்டிருக்கிறது என் இதயத்தில்.
உங்களை சந்தித்து பதினாறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது....நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்றுகூட எனக்குத் தெரியாது.
எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது டீச்சர்.
என்றாவது உங்களை சந்திக்க நேர்ந்தால்...
எனக்கு தமிழை அறிமுகப்படுத்திய உங்களிடம் என் கவிதைகளை எல்லாம்படித்துக் காண்பிக்க வேண்டும்..
படித்து முடித்த பின் மலருகின்ற உங்கள் விழிகளில் என் உயிர்கரைய வேண்டும்.
என்றாவது இதைப் படித்து என் பெயர் கண்டு எனை நினைவுகூர்ந்து நீங்கள் கண்டுபிடித்தால் அதுபோதும் எனக்கு.
கொஞ்சம் அழுவேண்டும் இப்போது நான்...இது கவலைக்கண்ணீரோ ஆனந்தக் கண்ணீரோ அல்ல.
ஒரு பெயர்தெரியாத பாசத்தின் வெளிப்பாடு...
பழைய பாசநினைவில் மூழ்கியபடி...
நிலாரசிகன்.
1.தொபரா டீச்சர்:-
என் விரல் பிடித்து அ,ஆ எழுத சொல்லித் தந்த என் முதல் வகுப்பு
ஆசிரியை இவர்.
தோளில் புத்தகப்பையுடன்,எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து சீவிய தலையுடன்
பள்ளிச் சென்று வந்த பசுமையான காலம் அது.
பள்ளிச் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகள் பார்த்திருப்பீர்கள்.
பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தை கண்டதுண்டா?
நான் அடம்பிடித்திருக்கிறேன்...
எங்கள் கிராமத்தில் முதல் முதலில் துவக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளி அது.
அதில்தான் என்னைச் சேர்த்தார்கள்...
அது ஒரு பெரிய பங்களா. அதை பள்ளியாக மாற்றி இருந்தார்கள்.
(இன்று அதை மாற்றி ஒரு கணிப்பொறி மையம் வந்துவிட்டது...அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம் மனம் கனமாகி விழியோரம் வழிந்துவிடும்)
எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது.
எங்கள் வகுப்புக்கு பலர் ஆசிரியர்களாக வந்துச் சென்றனர்...ஆனால் இந்தச் சிறிய
இதயத்தின் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தொபரா டீச்சர் மட்டும்தான்.
அம்மா நியாபகம் வந்து அழுகின்ற குழந்தைகளை அன்போடு அணைத்து,கண்ணீர் துடைத்து நேசத்துடன் பாடம் நடத்துகின்ற ஒரு ஜீவன் சிறுவகுப்பு ஆசிரியர்கள்
மட்டும்தானே?
எத்தனையோ குழந்தைகள் பள்ளி என்று மறந்து "அம்மா" என்று அழைப்பதெல்லாம் அந்த அன்பான ஜீவன்களைப் பார்த்துதான்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்...
தெய்வமே செய்கின்ற தொழில்தானோ ஆசிரிப்பணி?
எங்கள் தொபரா டீச்சர் அன்பானவர்.
அவரைப் போலவே அவரது கையெழுத்தும் மிகவும் அழகாய் இருக்கும்.
மற்றவர்களை விட அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருந்ததாக பட்டதுஅந்த புரியாத வயதில்.
என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்தது.
டீச்சர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
எளிதில் கோபப்படாத நீங்கள் ஒருநாள் என்னைத் திட்டிவிட்டீர்கள்.
பனித்துளி விழுந்தால் பூக்கள் தாங்கிக்கொள்ளும். ஆனால் இந்தச் சின்னப்பூவின் மேல் பாறை அல்லவா விழுந்தது...
உடைந்து போன நான் வகுப்பு நடக்கும்போதே வீட்டிற்கு ஓடிவிடுகிறேன்.
எல்லோரிடமும் நீங்கள் என்னைத் திட்டியதைச் சொல்லி அழுகிறேன்.
அதன் பின் என் வீட்டினர் என்னை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றனர்...
அப்போது மதியவேளை....கொண்டுவந்த சாப்பாடு பாத்திரம் திறந்துவரிசையாய் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன்...
அங்கே நீங்கள் வந்தீர்கள்....
செதுக்குகின்ற சிற்பத்திற்கு வலிக்கும் என்று உளிக்கு தெரியாதா என்ன!
அன்றுதான் முதல் முதலில் உங்கள்கண்கள் கலங்கியதை கண்டேன்....(இந்த நிமிடமும்..இதை எழுதுகின்றஇந்த நொடியிலும் என் விழியோரம் நீர்த்துளிகள்...)
என்னை அன்போடு அணைத்துக்கொண்டீர்கள்...எனக்கு அந்த நேசத்தின்அணைப்பை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை டீச்சர்.
அதுநாள் வரை எனக்கு அறிவூட்டியவர்கள் அன்று எனக்குஉணவூட்டி உயிர்மலரச்செய்தீர்கள்.
நாட்கள் நதியாய் நகரத் தொடங்கியதில் நான் உயர்நிலைப்பள்ளிக்குமாறினேன்....
புது நண்பர்கள்...புது பள்ளி....என்று வந்த மாற்றத்தில் உங்களை நான்மறந்து போனேன்....
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்...
என் தோழன் ஒருவன் வந்து என் கையில் ஒரு திருமண பத்திரிக்கைதிணித்துச் சென்றான்...
பிரித்துப் பார்த்தேன்....உங்கள் திருமண அழைப்பிதழ் அது....
ஏறக்குறைய ஏழுவருடங்களாக என் நினைவில் இருந்தே மறைந்து விட்ட உங்கள் பெயரை அன்று அந்த பத்திரிக்கையில் பார்த்தேன்.
என்னை மறக்காமல் நீங்கள் பத்திரிக்கை அனுப்பி இருந்தது கண்டு சில நிமிடங்கள் என்னால் பேச முடியவில்லை டீச்சர்.
அன்று விழுந்த உங்கள் அன்பு நினைவுவிதை விருட்சமாக வளர்ந்து இன்னும் பூக்கள் சிந்திக்கொண்டிருக்கிறது என் இதயத்தில்.
உங்களை சந்தித்து பதினாறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது....நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்றுகூட எனக்குத் தெரியாது.
எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது டீச்சர்.
என்றாவது உங்களை சந்திக்க நேர்ந்தால்...
எனக்கு தமிழை அறிமுகப்படுத்திய உங்களிடம் என் கவிதைகளை எல்லாம்படித்துக் காண்பிக்க வேண்டும்..
படித்து முடித்த பின் மலருகின்ற உங்கள் விழிகளில் என் உயிர்கரைய வேண்டும்.
என்றாவது இதைப் படித்து என் பெயர் கண்டு எனை நினைவுகூர்ந்து நீங்கள் கண்டுபிடித்தால் அதுபோதும் எனக்கு.
கொஞ்சம் அழுவேண்டும் இப்போது நான்...இது கவலைக்கண்ணீரோ ஆனந்தக் கண்ணீரோ அல்ல.
ஒரு பெயர்தெரியாத பாசத்தின் வெளிப்பாடு...
பழைய பாசநினைவில் மூழ்கியபடி...
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Thursday, November 10, 2005
பெண்
பருவம்-1.
ரெட்டை ஜடை,
பட்டுப்பாவாடை,
கண்ணாடி வளையல்,
நாய்க்குட்டியின் சினேகிதி.
பருவம் -2.
மார்கழிக் கோலம்,
தாவணிக் கனவுகள்,
குனிந்த பார்வை,
சத்தமில்லாத சிரிப்பு,
கண்ணாடியின் சினேகிதி.
பருவம்-3.
இடுப்பில் குழந்தை,
நெஞ்சில் கணவன்,
தலைமீது மாமியார்,
சம்பளமில்லா வேலைக்காரி,
சமையலறையின் சினேகிதி.
பருவம்-4.
பிள்ளைக்காக பிராத்தனை,
சாய்வு நாற்காலி,
பழைய நினைவுகள்,
தோட்டத்துச் செடியின் சினேகிதி.
ஜன கண மன...
ரெட்டை ஜடை,
பட்டுப்பாவாடை,
கண்ணாடி வளையல்,
நாய்க்குட்டியின் சினேகிதி.
பருவம் -2.
மார்கழிக் கோலம்,
தாவணிக் கனவுகள்,
குனிந்த பார்வை,
சத்தமில்லாத சிரிப்பு,
கண்ணாடியின் சினேகிதி.
பருவம்-3.
இடுப்பில் குழந்தை,
நெஞ்சில் கணவன்,
தலைமீது மாமியார்,
சம்பளமில்லா வேலைக்காரி,
சமையலறையின் சினேகிதி.
பருவம்-4.
பிள்ளைக்காக பிராத்தனை,
சாய்வு நாற்காலி,
பழைய நினைவுகள்,
தோட்டத்துச் செடியின் சினேகிதி.
ஜன கண மன...
Labels:
கவிதைகள்
நான் பெத்த மகளே...
நீ பொறந்தநாலு மாசத்துல
காது குத்த போகையில
கண்ணு கலங்கி கோயில்
தூணுக்கு பின்னாலகாணாம
போனவுக....
சிலேட்டு குச்சிதிங்குற
வயசுல வேகாதவெயிலுல
அஞ்சுமையிலு அலைஞ்சி
அய்யனாரு கடையில
நோட்டுப் புத்தகம்
வாங்கியார போனவுக...
அம்மன் கோவில் திருவிழாவுல
பலூனுவாங்க போன புள்ள
அரைமணி கழிச்சுவந்த நாளுல
என்னாச்சோ ஏதாச்சோன்னு
சிங்கத்துக்கு பயப்படாத
எம் மகராசா சின்னபுள்ள
உனக்காக பயந்து போனவுக....
ரெட்ட ஜடை போடுறவயசுல
பொட்ட புள்ளஉனக்குபட்டுத்
தாவணிவாங்கியார நடந்தே
பட்டணம்போனவுக...
வாசல்லகோலம் போடபோன
புள்ளமனசுல கோலம்போட்டு
போனானே ஒரு வெளங்காத பய..
சடங்கான சேதியஆத்தாக்கிட்ட
சொல்லாம அப்பங்கிட்ட
சொன்னபாசங்கெட்ட புள்ள,
காதலிச்ச கருமத்தயாருகிட்டயும்
சொல்லாமபோனியே!
வேற சாதி பையனாஇருந்தாலும்
பெத்தபுள்ள உம்பட்டு
மனசுபட்டுருக்கூடாதுன்னு
எம் மகராசாசம்மதிச்சிருப்பாகளே….
அவசரப்பட்டு போயிட்டியே..
உன்னப் பார்க்கஅவசரப்பட்டு
எட்டரை மாசத்துல
நா பெத்தமரிக்கொழுந்தே!
ஊரெல்லாம் ஒண்ணுக்கூடிசிரிக்க,
ஓடிப்போன உன்னால உத்திரத்துல
தொங்கிஎம் பொட்டு அழிச்சிபோனவுக...
நாப்பது வருசம்நாயா
அலைஞ்சுஎறும்பா சேர்த்துவச்ச
நாப்பது காணிநிலத்தசாகப்போற
நேரத்துலபொறக்க போறஉம் புள்ளைக்கு
எழுதிவைச்சுபுட்டு போனவுக...
அப்பஞ் சாவுக்குவராத
வெக்கம் கெட்டபுள்ள..
ஆத்தா நா நிம்மதியாபாடையில
போக...
பத்திரம் தொலையும்முன்னே
பத்திரமா வந்திடடி…
காது குத்த போகையில
கண்ணு கலங்கி கோயில்
தூணுக்கு பின்னாலகாணாம
போனவுக....
சிலேட்டு குச்சிதிங்குற
வயசுல வேகாதவெயிலுல
அஞ்சுமையிலு அலைஞ்சி
அய்யனாரு கடையில
நோட்டுப் புத்தகம்
வாங்கியார போனவுக...
அம்மன் கோவில் திருவிழாவுல
பலூனுவாங்க போன புள்ள
அரைமணி கழிச்சுவந்த நாளுல
என்னாச்சோ ஏதாச்சோன்னு
சிங்கத்துக்கு பயப்படாத
எம் மகராசா சின்னபுள்ள
உனக்காக பயந்து போனவுக....
ரெட்ட ஜடை போடுறவயசுல
பொட்ட புள்ளஉனக்குபட்டுத்
தாவணிவாங்கியார நடந்தே
பட்டணம்போனவுக...
வாசல்லகோலம் போடபோன
புள்ளமனசுல கோலம்போட்டு
போனானே ஒரு வெளங்காத பய..
சடங்கான சேதியஆத்தாக்கிட்ட
சொல்லாம அப்பங்கிட்ட
சொன்னபாசங்கெட்ட புள்ள,
காதலிச்ச கருமத்தயாருகிட்டயும்
சொல்லாமபோனியே!
வேற சாதி பையனாஇருந்தாலும்
பெத்தபுள்ள உம்பட்டு
மனசுபட்டுருக்கூடாதுன்னு
எம் மகராசாசம்மதிச்சிருப்பாகளே….
அவசரப்பட்டு போயிட்டியே..
உன்னப் பார்க்கஅவசரப்பட்டு
எட்டரை மாசத்துல
நா பெத்தமரிக்கொழுந்தே!
ஊரெல்லாம் ஒண்ணுக்கூடிசிரிக்க,
ஓடிப்போன உன்னால உத்திரத்துல
தொங்கிஎம் பொட்டு அழிச்சிபோனவுக...
நாப்பது வருசம்நாயா
அலைஞ்சுஎறும்பா சேர்த்துவச்ச
நாப்பது காணிநிலத்தசாகப்போற
நேரத்துலபொறக்க போறஉம் புள்ளைக்கு
எழுதிவைச்சுபுட்டு போனவுக...
அப்பஞ் சாவுக்குவராத
வெக்கம் கெட்டபுள்ள..
ஆத்தா நா நிம்மதியாபாடையில
போக...
பத்திரம் தொலையும்முன்னே
பத்திரமா வந்திடடி…
Labels:
கவிதைகள்
Thursday, May 12, 2005
அம்மா..
என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி.
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி.
Labels:
கவிதைகள்
புல்தரையும் நானும்..
x
சிறிய வயதில்சினிமாவில்தான்
முதன்முதலில்புல்தரையை
பார்த்து வியந்தேன்..
ஒரு நாளாவது புல்தரையில்
அமரவேண்டும் என்கிற என்
ஆசை அரசியல்வாதியின்
நாற்காலி ஆசையைவிட
அதிகமாகிப்போனது..
உயர்கல்விக்காக நகரம்வந்தபோது
நண்பர்கூட்டத்தின்கிண்டலுக்கு
நடுவிலும்பூங்கா
ஒன்றில் புல்தரையைக்கண்டவுடன்
அம்மாவின் மடியில்
உட்காரஓடும் குழந்தையாய்ஓடிச்
சென்று அமர்ந்தேன்..
புற்களின் கிரீடமாய்
இருந்தபனித்துளியிடம் நலம்விசாரித்தேன்..
இப்படியாக,
எவ்வளவுதான்புல்தரையை
நேசித்தாலும் வராத
காதலிக்காக ஒரு
மணிநேரமாக காத்திருக்கையில்
புற்களைபிய்த்து
எறிந்ததில்மறந்தேபோனது
புல்லின்புனிதம்!
சிறிய வயதில்சினிமாவில்தான்
முதன்முதலில்புல்தரையை
பார்த்து வியந்தேன்..
ஒரு நாளாவது புல்தரையில்
அமரவேண்டும் என்கிற என்
ஆசை அரசியல்வாதியின்
நாற்காலி ஆசையைவிட
அதிகமாகிப்போனது..
உயர்கல்விக்காக நகரம்வந்தபோது
நண்பர்கூட்டத்தின்கிண்டலுக்கு
நடுவிலும்பூங்கா
ஒன்றில் புல்தரையைக்கண்டவுடன்
அம்மாவின் மடியில்
உட்காரஓடும் குழந்தையாய்ஓடிச்
சென்று அமர்ந்தேன்..
புற்களின் கிரீடமாய்
இருந்தபனித்துளியிடம் நலம்விசாரித்தேன்..
இப்படியாக,
எவ்வளவுதான்புல்தரையை
நேசித்தாலும் வராத
காதலிக்காக ஒரு
மணிநேரமாக காத்திருக்கையில்
புற்களைபிய்த்து
எறிந்ததில்மறந்தேபோனது
புல்லின்புனிதம்!
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)


